52. | கமலப் பூவும், கடந்தொடு மறைம், | | ஓதிமப் பரியும், உயர்ந்தோர் கூட்டமும் | | நாமகள் சேர்க்கையும் நான்கு முகமும் | | அன்னசீர் பிறவும் அயன்தனக்கு உரித்தே. |
| தாமரை மலர் இருக்கை, நீர்க்குண்டிகை, வேதச்சுவடி, அன்னப்புள் ஊர்தி, உயர்ந்தவர்களின் சூழல், கலைமகளின் கூட்டம், நான்கு முகங்கள் ஆகியனவும் இத்தகைய வேறு சிறப்புகளும் பிரமதேவனுக்கு உரியன என்றவாறு. | அன்னசீர் பிற என்றதில் ஜபமாலை, சிருக்கு, தருப்பைப்புல், அபயவரதம் போன்றவை அடங்கும். (585) | 53. | புலவோர் நாவும், பூத்தவெண் கமலமும் | | பளிங்கு வடமும், படிக்கும் சுவடியும் | | கலசம் ஆதியும் கலைமகட்கு உரித்தே. |
| புலவர்களின் நாக்கு, மலர்ந்த வெண்டாமரை ஆகிய இருக்கையும், கரங்களில் படிகமாலை, ஏட்டுச்சுவடி, அமுத கலசம் ஆகியனவற்றை ஏந்தலும், இன்ன பிறவும் சரஸ்வதிக்கு உரியனவாம் என்றவாறு. | ஆதி என்பதனுள் அபயவரதம், வீணை, வெள்ளைப்புடவை, அன்னப்பறவை, பூரான் என்னும் ஊர்திகள் போன்றவை அடங்கும். (586) | 54. | மதியும், கிள்ளையும், வசந்தனும், குயிலும், | | கடலும், அன்றிலும், கார்இருட் பெருக்கும், | | வண்டும், கரும்பும், மலர்க்கணை ஐந்தும், | | வகுள மாலையும், மங்கையர் கூட்டமும், | | கேதகைப் பூவும், கிளத்துவ பிறவும், | | அன்னத்து இவரும் அணங்கும் அங்கசற்கு | | உரியன வாம்என்று உரைத்தனர் உணர்ந்தோர். |
| சந்திரனாகிய குடை, கிளி ஆகிய வாகனம், வசந்தன் ஆகிய தோழன், குயில் ஆகிய திருச்சின்னம், கடல் ஆகியமுரசு, அன்றில் ஆகிய காளம், கார் இருள் ஆகிய யானை, வில் நாண் |
|
|