மலையை நாடி மேகங்கள் வருவதைப் போலச் சான்றோர் களிடத்தைத் தேடி மெய்யறிவு வந்தடையும் என்று கூறலும் கற்பனை என்றே சொல்லப்படும் என்றவாறு. |
இந்நூற்பா பருப்பொருட்களுக்கேயன்றிக் கட்புலனாகாத நுண்பொருள்கட்கும் கற்பனையில் இடமுண்டு என்கிறது. மெய்ப்பொருள் என்றது ஆகுபெயராக மெய்ப் பொருளைப் பற்றிய ஞானத்தைச் சுட்டி நின்றது. (610) |
78. | மறுஉறா மதியம் ஆறு போலும் | | முகம்உறு குகவேள் என்கையும் ஒருவகைக் | | கற்பனை ஆம்எனக் கருதுநர் சிலரே. |
|
களங்கம் இல்லாத முழுமதி ஆறு வரிசையாக இருப்பதைப் போன்ற ஆறு திருமுகங்கள் உடையவர் முருகப்பெருமான் என்று கூறினாலும் அதுவும் ஒருவகைக் கற்பனையே என்பார் சிலர் என்றவாறு. |
களங்கம் இல்லாத திங்கள் இல்லாததொன்று. அவ்வாறே ஆறு மதிகளும் கிடையா. இல்லாதவனவற்றை உள்ளதாகப் பாவித்து இங்கே உவமை கூறப்பட்டது. அணிநூலார் இதனை ‘இல்பொருள் உவமை’ என்பர். வடமொழியில் இது அபூத உவமை எனப்படும். (611) |
79. | கீழ்த்திசை வடதிசை ஆகிக் கிளரொளி | | இரவியும் உதிப்பினும் இயற்றமிழ்ப் பொதுமறை | | ஆயவள் ளுவன்சொல் அறிந்த மேலோர் | | கொலைபுலை நலம்எனக் கூறார் என்கையும் | | ஒருசிறப்பு ஆகும்என்று உரைப்பார் உணர்ந்தோர். |
|
“கிழக்குத்திசை வடக்காக மாறி அங்கே சுடர் பரப்புகின்ற சூரியன் தோன்றினாலும் இயற்றமிழ்ப் பொதுமறையாகிய திருக்குறளை நன்குணர்ந்த பெரியோர் பிற உயிர்களைக் கொல்வதையும் ஊன் உண்ணலையும் ஏற்கத்தக்கது எனக் கூற மாட்டார்கள்” என்பதுபோலச் சொல்வதையும் புலவர் ஒரு சிறப்பான கற்பனைவகையாகக் கொள்வர் என்றவாறு. |