கோழி கூவுதலும், காகம் ஆந்தை முதலிய பறவைகளின் தொனியும், கரிக்குருவியின் ஓசையும், கோட்டானும் திருடரும் தம் இருப்பிடத்திற்குச் செல்லலும், வாலிபரும் மங்கையரும் பிரிவை எண்ணிக் கலக்க முறுதலும், மறைநூல்வழி ஒழுகுகின்றவர்கள் உள்ளம் உவத்தலும் அதிகாலையாகிய சிறு பொழுதுக்குரியனவாம் என்றவாறு. |
கதிரவன் உதிப்பதற்கு முன்பே எழுந்து காலைக்கடன்களை முடித்துச் சூரியனை நமஸ்காரத்திற்காக வைதிகர் எதிர்பார்த் திருப்பர். இறைவழிபாட்டால் அவர் களிப்படைவர். எனவே இது இந் நூற்பாவில் இடம்பெற்றது. (618) |
காலை நேரம் |
86. | கதிரவன் உதித்துள காலையில் நிகழ்வன | | தாமரை மலர்தலும்; சற்குரு பரன்அருள் | | குறிப்பார் தம்கரம் குவிதலும்; அவரவர் | | தம்தொழில் முயல்வதும்; சலதியும், குறைமதி | | ஒளியும், காமமும் ஒடுங்கலும்; உடுஇனம் | | அனைத்தும் மறைதலும் அன்னசீர் பலவுமே. |
|
தாமரைப்பூ விரிதல், ஞான பண்டிதனாகிய முருகப் பெருமான் அருளை நாடும் அடியார்கள் கைகூப்பி வணங்குதல், தொழிலாளர்கள் அனைவரும் தத்தம் பணிகளில் ஊக்கத்துடன் ஈடுபடுதல்; கடலின் ஆர்ப்பும் பிறைச் சந்திரனின் பிரகாசமும் காமஉணர்வும் குறைதல்; நட்சத்திரக் கூட்டங்கள் யாவும் முற்றிலும் மறைதல் ஆகிய நிகழ்ச்சிகளும் இன்ன சிறப்புகள் பலவும் சூரியன் தோன்றுகின்ற காலையில் நிகழ்வனவாம் என்றவாறு. |
சற்குருபரன் என்பதற்குப் பொதுவாக ஞானாசிரியன் எனப் பொருள்கொண்டு மாணவர்கள் தத்தம் குருநாதருக்குப் பணிவிடை செய்து வணங்குதல் எனினும் ஆம். சூரியன் உதித்த |