99. | அடிதொழும் தொண்டர் அட்டமா சித்தியும் | | முத்தியும் பெறச்செயல் முதல்வற்கு ஆக்கமே. |
|
தன்னைப் பணியும் அடியார்கள் எண்வகையான சித்திகளையும் பேரின்ப வீட்டையும் அடையுமாறு அருள்பாலித்தல் பரம்பொருளுக்குச் சிறப்பாம் என்றவாறு. |
“ஒருவன் இலட்சாதிகாரியாவதன்முன் கோடீசுரன் ஆகான் என்பதுபோல எப்படிப்பட்ட தவசியும் சித்தன் ஆவதன்முன் முத்தன் ஆவதில்லை” என்பது1 இவர் கொள்கை. அதற்கேற்பச் சித்தியை முற்கூறி யடுத்து முத்தியை வைத்தார். |
ஈசன் கொடுக்குமவை எல்லாவற் றும்பெரியது ஆசுஅகன்ற முத்திஅதே2 ஆதலின் முதல்வதற்கு ஆக்கம் எனப்பட்டது. (632) |
100. | இரக்கமும் சுத்தமும், இறைவனை மறவாத் | | தொண்டும் தூய்மையும் துறவோர்க்கு ஆக்கமே. |
|
பிற உயிர்களிடத்துக் கருணை உடையவன் ஆதல், உள்ளத் தூய்மை, கடவுளை எக்கணத்திலும் மறந்துவிடாமல் இறை பணியாற்றுதல், தன் உடலைத் தூய்மையாக வைத்திருத்தல் என்பன துறவிகளுக்குச் சிறப்பாகும் என்றவாறு. |
“உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு”3 ஆதலின் இரக்கம் முன்கூறப்பட்டது. “முதலில் சொல்லப்பட்ட சுத்தம் உள்ளத்தூய்மையும், பிறகு வந்தது உடற்றூய்மையும் ஆம். “புறந்தூய்மை நீரான் அமையும்; அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்”4 என்றமையால் சுத்தம் என்பதற்கு வாய்மை எனினும் அமையும். |
101. | சுவைமிகச் சொல்லலும் சொற்படி முடித்தலும் | | புலவருக்கு ஆக்கம் என்னும் புவியே. |
|
|