வளப்பம் மிக்க தமிழ்மொழியில் கவிதைகளை இயற்ற விழைவோருக்கு இலக்கண நூல்கள் நல்ல துணைதான்; ஆனால் கடவுளின் அருளை நாடிப் பெறுதல் அதனைவிடப் பலமடங்கு உதவியானது என்றவாறு. |
எடுத்த காரியம் எதுவானாலும் முட்டின்றிச் சிறப்பாக நிறைவேற இறையருள் வேண்டும். பொதுவான இந்த உண்மை கவிதை இயற்றுதலுக்கு மிகச்சிறப்பாகப் பொருந்தும் என்பது இவர் கொள்கை. இதுபற்றியே இவ்வாசிரியர் “மற்றோர் உடலிற் புகுவல் லமையும் கற்றோர் புகழ்கல் விமுதற் பிறவும் பெற்றோர் வலியன்று; பிறங்குமணிப் பொற்றோகைமயிற் புனிதன் தரலே”1 எனவும், “யாப்பு இயல்பு உணரினும் எடுத்த வண்ணம் பாடுமாறு அருள்வது பாரதி கடனே”2 எனவும் கூறியுள்ளார். (649) |
8. | கணபதி முருகன் கலைமகள் உமையவள் | | பரமன் பரிமுகப் பகவன் என்னும் | | அறுவகைத் தெய்வமும் அருந்தமிழ்ப் புலமைக்கு | | உரிய வாம்என்று உரைத்தனர் உணர்ந்தோர். |
|
விநாயகர், செவ்வேள், சரசுவதி, பார்வதி, சிவபெருமான் குதிரை முகத்தோடு ஹயக்ரீவ அவதாரம் எடுத்த திருமால் ஆகிய ஆறு தெய்வ வடிவங்களும் எளிதிற் பெறலரிதாகிய தமிழ்ப் புலமையைப் பெறவிரும்பும் ஒரு மாணவனால் உபாசிக்கத் தக்க உருவங்கள் ஆகும் என்று அநுபவபூர்வமாக அறிந்த பெரியோர்கள் கூறுவர் என்றவாறு. |
முன் நூற்பாவில் தெய்வத்துணை வேண்டும் எனக்கூறிய ஆசிரியர் இச்சூத்திரத்தில் அதற்கு எவ்வடிவ வழிபாடு சிறந்தது என அறிவுறுத்துகிறார். அறுசமயக் கடவுளரில் சூரியனை நீக்கிவிட்டுக் கலைமகளைச் சேர்த்துக் கூறியுள்ளார். சூரியனை உபாசித்துத் தமிழ்ப்புலமை பெற்றதாக |
|