படிஆடும் சித்தி எட்டும்; இயம்பரிய தனிவீடும் இலங்கும்; இன்றேல் துட்டன் எனும் பெயர்கொடுத்துத் துன்பம் ஊட்டிச் சுடுகனலாம் நரகினிலும் தோய்க்கும் அன்றே.”1 எனக் கூறுவதை இங்கு அவசியம் இந்நூற்பாவுடன் இணைத்துச் சிந்திக்க வேண்டும். |
சமயக் கருத்துடன், ஆன்ம நோக்கத்தோடு, ஆழமான சிந்தனைக்காகக் கூறப்பட்ட இந்நூற்பாப் பொருளே பொதுவான உலகியல் நெறியில் எளிதாக அடுத்த நூற்பாவில் கூறப்படுகிறது. |
37. | எள்ளிடைப் புலமை இசையும் முன்னம் | | நெல்லிடை யாண்மை நிலவல்ஓர் தவறே. |
|
எள்ளளவு கல்வியறிவு பெறுவதற்கு முன்பாகவே நெல்லளவு செருக்கடைவது தவிர்க்கப்பட வேண்டியதோர் தவறு ஆகும் என்றவாறு. |
“கற்றுதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்று உற்ற கலைமடந்தை ஓதுகின்றாள்”2 எனத் தமிழ் மூதாட்டி கூறியது மாணவரின் மனத்திருக்க வேண்டும் என்கிறார். செருக்குத் தோன்றினால் கல்வி வேட்கைக்கு இடமில்லை; எனவே வளர்ச்சியுமில்லை. உண்மையாகக் கல்வியை விரும்புபவர் சாந்துணையும் செருக்கின்றிக் கற்பார். (679) |
38. | காகப் புள்என இனத்தொடு கலாவாது | | ஞாளிபோற் பகைக்கும் நாவலர் பலரே. |
|
காகம் தன் இனத்தோடு கலந்து வாழ்வதைப் போலன்றித் தன் இனமாகிய பிற நாய்களையே வெறுத்துத் துரத்தும் நாய்க்குணம் படைத்த புலவர்கள் பலராவர் என்றவாறு. |
ஒரு புலவர் ஒரு புலவரை மதிப்பதில்லை. இது கல்வியால் |
|