பூதமைந்தும் காரியமாம் பௌதிகமும் சீர்அருள்சித்து ஆடும் தினம்”1 என்னும் கொள்கைக் கிணங்கக் கூறப்பட்டது. |
பருப்பொருள்கள் பூதங்களின் சேர்க்¬க்களால் ஆனவை எனில் அவை பகுதிகளை உடையன - அதாவது கண்டப் பொருள் என்பது ஒதுதலை. எந்த ஒன்றுபகுதிகளால் ஆயதோ அது நிலையற்றது; ஒரு நாளின்றேனும் ஒரு நாள் அழிந்துவிடும் என்பது தத்துவநூற் கொள்கை. |
நிலையாமையை உணராதவருடைய புலமை முழுப் புலமையன்று என்பது இந்த இரண்டாவது பொருள்கோளின் கருத்து. (694) |
53. | கொண்ட துறையினைக் கோதுபடக் கூறின் | | மண்டலத் தாரும் மதியார் அன்றே. |
|
தாம் பாடத் தொடங்கிய துறையைத் தவறாகப் பாடுவாராகில் இவ்வுலகில் யாருமே அவரைப் போற்ற மாட்டார் என்றவாறு. |
அகத்துறையோ புறத்துறையோ எதுவாக இருப்பினும் அல்லது இலக்கணம், தத்துவம் முதலிய அறிவுத்துறைகளில் எதுவாக இருப்பினும் சொல்ல வந்ததைக் குற்றமில்லாமலும் தெளிவாகவும் சொல்லவேண்டும். அதில் தவறு இருந்தால் அறிஞர்கள் மட்டுமல்ல - பாமரர்களும் மதிக்கமாட்டார்கள் என்பது கருத்து. மண்டலத்து ஆரும் மதியார் எனவும், மண்டலத்தாரும் மதியார் எனவும் இரட்டுற மொழிதலாகக் கொள்க. பின்னது ஆகுபெயராகி மிகுதிபற்றிப் பாமரரை உணர்த்திற்று. அன்றே-ஈற்றசை. (695) |
54. | அருட்பே ராளருக்கு அஞ்சாப் புலமை | | மருட்சி யினதுஎன வையப் படுமே. |
|
திருவருள் வலிமை பெற்றுள்ள பெரியவர்களுக்குக் கூட |
|