குறை கூறுபவனின் உள்ளமும் உரையும் தம்முள் மாறுபடுதலின் அவர் பொல்லார் எனவும், அவர்செயல் கொடுமையானது எனவும் கூறப்பட்டது. அவர்செயல் சத்தியத்திற்கு மாறுபட்டதாதலின் செய்யும் நாளிலேயே அது தெய்வத்தால் குறித்துக் கொள்ளப்படும் என்கிறார். கூறவே இதனால் தெய்வதண்டனை நேரும் என்பது பெறப்பட்டது. (707) |
66. | பொருட்குவை குலத்துஉயர்வு அரசு பூண்உடை | | பட்டம் ஆதிய பற்றிப் புலமைக்கு | | உயர்ச்சி கூறலும் ஒவ்வா முறையே. |
|
ஒருவன் பெற்றுள்ள செல்வவளம், தோன்றிய குடும்பத்தின் சிறப்பு, வசிக்கும் அதிகாரமுள்ள பதவி, அணிந்துள்ள ஆடையணிகளின் ஆடம்பரம், பெற்றுள்ள விருதுகள் முதலியனவற்றில் ஒன்றையோ அல்லதுசிலவற்றையே மட்டுங்கருதி அவனுடைய புலமையைத் தகுதியற்றபோதும் புகழ்ந்துரைத்தல் உண்மைப் புலவனுக்குப் பொருந்தாத செயலாம் என்றவாறு. |
முதல் நூற்பாவில் சிறந்த புலமை பழிக்கப்படுவதைத் தவறு என எடுத்துக்காட்டியவர் இதில் இழிந்த புலமை வேறு பற்பல காரணம் பற்றி வானளாவப் புகழப்படுவதையும் விளக்குகிறார். பூண்உடை உம்மைத்தொகை. இந் நிகழ்ச்சியை நாடோறும் கண்டுவருலின் விரித்தல் மிகை. |
“விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்; விரல்நியை மோதிரங்கள் வேண்டும்; அரையதனில்பஞ்சேனும் பட்டேனும் வேண்டும்; அவர்கவிதை நஞ்சேனும் வேம்பேனும் நன்று” என்னும் பழம்பாடல் இங்கு நினைவுகூரத் தக்கது. |
67. | கோங்குஅரும்பு அன்ன குவிமுலைக் கோதையர் | | தீஞ்சுவைச் சொல்லினும் செந்தமிழ் இனிதுஎன | | மனமும் தெய்வமும் அறிய வாழ்த்தும் | | புலவர்க்கு ஆகா தனஎலாம் புலமைக்கு | | உதவா தனஎன்று உணர்வது முறையே. |
|
|