நின்னை விரும்பி இறைவன் தோழனாக்கிக் கொண்டனன்’1 என்றும் கூறவதை நினைந்து நவின்றனன் நன்றே என்றார். அன்றே என ஈற்றசையாக்கின் பொருட் சிறப்பின்று. (721) |
80. | பல்நாடு உடையவன் பாண்டி நாடே | | உடையேன் என்னவந்து உரிமையோடு எழுதவும் | | வாதபூர்ப் புலவன் வழங்கினன் தமிழே. |
|
திருவாதவூரராகிய மாணிக்கவாசகர் எந்நாட்டவர்க்கும் இறைவராகிய சிவபெருமானே தென்னாடுடையவராக வந்து தாமே உரிையோடு ஓலையில் எழுதும்படித் திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் அருளிச் செய்தார் என்றவாறு. (722) |
81. | பைந்துழாய் போலப் பத்துப் பாவலர் | | செப்பிய தமிழ்நூல் தேறிப் பற்பலர் | | விரசைக்கு அப்பால் மேவினர் அன்றே. |
|
ஆழ்வார்கள் பதின்மர் திருமால் விரும்பிப் புனையும் துளசி மாலை¬யொத்து இயற்றிய நாலாயிர திவ்வியப் பிரபந்தமாகிய பாமாலைகளின் துணையால் கணக்கற்ற பாகவதர்கள் வைகுந்தப்பதவி அடைந்தனர் என்றவாறு. |
“பத்துப் பாவலர் பைந்துழாய் போலச் செப்பிய” என இயைக்க. விரசை என்பது வைகுந்தத்திற்குச் செல்லும் வழியில் குறுக்கிடுவதோர் ஆறு. (723) |
82. | மூவகைக் கழகத்து ஐயா யிரத்து | | நானூற்று முப்பத் தொன்பது புலவோர் | | வாழ்ந்தனர் எனப்பகர் மாந்தர் பலரே. |
|
தலைச்சங்கத்தில் 4900 புலவர்களும் இடைச்சங்கத்தில் 490 புலவர்களும் கடைச்சங்கத்தில் 49 புலவர்களும் ஆக மொத்தம் 5439 சங்கப் புலவர்கள் முன்னாளில் தமிழாய்ந்தனர் என்று பலர் கூறுவார்கள் என்றவாறு. |
|