பனங்கட்டையும் தளிர்த்துக் கனி தருமாறு தமிழிசைத்த ஒளவையாரும் குற்றமற்ற புலமைச் சிறப்புடையவள் ஆவாள் என்றவாறு. |
இந் நூற்பா ஒளவையார் பாடல்களாக வழங்கப்படும், “கூரிய வாளால் குறைத்திட்ட கூன்பலா”, “கூழைப் பலாத் தழைக்க”, “திங்கட்குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்” என்னும் தனிப்பாடல்களைப் பற்றிய வரலாறுகளை ஒட்டி எழுந்தது. (726) |
85. | மதுரைஊர்க் கடவுள் வையைக்கு அப்புறம் | | போய்வரப் படித்தான் புலவன் ஒருவனே. |
|
குலேச பாண்டியன் தன் பனுவலைப் போற்றாததால் சினங்கொண்டு சொக்கநாதப் பெருமான் ஆலவாயைவிட்டு நீங்கி வையையின் தென்கரையிலே கோயில்கொள்ளவும், பிறகு தன் சினம் தணிந்ததும் மீண்டும் ஆங்கு எழுந்தருளவும் இடைக்காடர் தமிழ்ப்பாப் புனைந்தார் என்றவாறு. |
இவ் வரலாறு திருவிளையாடற்புராணம் இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலத்தில் இடம்பெற்றுள்ளது. (727) |
86. | தொள்ளா யிரத்துத் தொண்ணூற் றொன்பது | | மாதவர் தன்னொடு மாளா வண்ணம் | | ஒருதமிழ்ப் புலவன் உரைபயின் றானே. |
|
திருப்பரங்குன்றக் குகையில் கற்கிமுகி எனப்பெயரிய பூதம் தான் உண்பதற்காக அடைத்து வைத்திருத்த 999 பேர்களுடன் தாழும் இறந்துவிடாதவாறு நக்கீரர் திருமுருகாற்றுப்படையைப் பாடினார் என்றவாறு. (728) |
87. | வேறுஇடத்து ஆறு விலகி ஓடவும் | | கல்உரு மகிழவும் கவிதை பாடினர் | | இருபுல வோர்என்று இயம்புநர் பலரே. |
|
தாம் பாடிய திருவாமாத்தூர்க் கலம்பகக் கவிக்கேற்ப அவ்வூரில் பம்பையாறு வழிமாறிச் செல்லும்படியும், ஒரு குளக் |