எழுத்திலக்கணம்050
நூற்பாவில் முந்திரி முதலிய ஒவ்வொரு பின்னத்திலும் கீழ் என்னும் சொல் இடம் பெறாவிடினும் கீழலகு அதிகாரப்பட்டமையின் உரையில் அது சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஆசிரியர் கருத்தும் அதுவேயாதல் அடுத்த நுற்பாவில் அவர் கீழ்முக்கால் என்பதால் தெளிவாகிறது.
இவ்வாசிரியர் கீழலகுகட்கும் நடுவலகுகட்கும் தனித்தனி குறியீடுகளைக் கூறுகிறார். எனினும் கீஎன்ற எழுத்திற்குப்பின் நடுவலகுக் குறியீட்டை வரைந்து அது கீழலகு எனப் பிரித்துக் காட்டும் வழக்கமும் நடைமுறையில் இருந்ததாகத் தெரிகிறது. தமிழ் முறைக் கணிதப்பயிற்சி முற்றிலும் வழக்கொழிந்தமையின் பெரும்பான்மையான அலகின் பெயரும் குறியீடும் நின்று நிலவாதொழிந்தன.
(37)
நடு அலகு
38.கீழ்முக் காலொடு ருகரத்து ஈறு
 பொருந்தில் முந்திரி; ரகரத்து ஈற்றைக்
 குறைத்து மேலுற வலமா வளைக்கில்
 அரைக்கா ணிக்குறி யாகும்; முந்திரியில்
 கிடைவரை முதற்கொடு தள்ளிற் காணி;
 சுவ்வே அரைமா; கூஎனும் எழுத்தின்
 ஈற்றுக் கிடைவரை தள்ளிமேல் வலமா
 வளைக்கில் முக்காணி; பகரமே ஒருமா;
 முற்பகர் முக்கால் ஈற்று நிலைவரை
 தொட்டிட மேலா வளைத்துஓர் வரையினும்
 ஒன்றாது அவ்வரைக் குறுக்கா வலங்கொடு
 தொடுத்துஓர் நிலைவரை மேல்இடல் அரைக்கால்;
 வகரமும் இகரமும் ளுகரமும் கால்அரை
 முக்கால் எனப்படும்; அன்றிச் சிற்சில
 கூட்டெழுத் தாகிக் குலவும் ஆதலின்
 நவின்றிலம்; இவைதாம் நடுவலகு உறுப்பே.
முன்நூற்பாவில் கூறப்பட்ட கீழ்முக்கால் குறியுடன் ருகர ஈறு பொருந்தினால் முந்திரியின் (1/320) குறியீடு ஆகும். ரகரத்தின் கடைசிக் குத்துக்கோட்டில் பாதியிலிருந்து வலப்