புலமையிலக்கணம்528
கொண்டார்,”1 எனவேதான் அருணகிரிநாதரின் பாடல்கள் அனைத்தும் தற்போது கிடைப்பதில்லை என்பது வரலாறு,
128.குலவுதென் மதுரைக் கோவில் வாவிப்
 பலகைஓர் புலவன் பார்க்கவந் தமையால்
 கொள்ளத் தக்கவர் கொளத்தகும் அன்றே.
மதுரை ஆலயத்தில்உள்ள பொற்றாமரைக் குளத்தில் மிகத் தொன்மையான சங்கப் பலகை பொய்யாமொழிப் புலவர் கண்காண நெடுநாள் கழித்து மிதந்து வந்ததுண்டு எனவே தகுதி உடையவர்கள் தோன்றினால் இதேபோல முன்னாளில் அழிந்து விட்டதாகக் கூறப்படும் நூல்களும் மீண்டும் தோன்றலாம் என்றவாறு.
ஒரு நூல் இயற்றப்பட்டுவிட்டால் அதன் ஏட்டுப் பிரதி அழிந்தாலும் ஒலிவடிவம் நாத தத்துவத்திலே நிலைத்திருக்கும் என்பது இவர் நம்பிக்கை. சங்க காலத்துச் சங்கப் பலகை பல காலம் கழித்து மீண்டும் பொய்யாமொழிப் புலவருக்குக் காட்சியளித்ததைப்போல இந்நூல்களும் தகுதி மிக்க அடியார் வழியாகத் தோன்றக்கூடும் என்கிறார். பாண்டியன் எதிரில் பொய்யாமொழிப் புலவர், “பூவேந்தர் முன்போல் புரப்பார் இலைஎனினும் பாவேந்தர் உண்டுஎன்னும் பான்மையால் கோவேந்தன் மாறன் அறிய மதுரா புரித்தமிழோர் வீறு அணையே சற்றே மித”2 என்னும் வெண்பாப் பாடினார். ‘அதுவிளம்பலும் அனைவரும் காண அம்மணை மிதந்திட்டது”3 என்பது ஒரு வரலாறு.
(770)
129,புணரி ஆதிய புனலினும் கனலினும்
 யான்ஓர் நிமித்தத்து இட்ட பாடல்
 தரத்தகும் புலவன் யாவன் எனினும்
 அவன்பத மலர்த்துணை அமரும் என் சிரத்தே.