முடிந்தது. இதனைக் கற்பார் இதன்வழி ஒழுகிக் கருணை மிகப்பெற்று மாதவம் முயன்று உலகிற்கு நலம் பயப்பதாகிய அருஞ்செயல்களைப் புரிந்து, பின் பிறவியின் முழுப்பயனாகிய வீட்டின்பத்தையும் அடைதல் வேண்டும். என்னும் எண்ணம் மேலோங்குகிறது என்றவாறு. | கருதிய பயன் என்பது இந்நூலாசிரியர் கொள்கைகட்கேற்ப விரித்துரைக்கப்பட்டது. இந் நூற்பயன் இவராலேயே முன்னர் பொதுப் பாயிரத்தின் ஆறாங்கவியில் கூறப்பட்டது., இந்நூற்பாவுடன் இப்பிரிவும், செயல்வகை இயல்பும், அறுவகை இலக்கண நூலும் நிறைவுபெறுகின்றன. (786) | செயல்வகை இயல்பு முற்றும், | புலமை இலக்கணம் முற்றும். | ஆகச் சூத்திரம் 786 | வண்ணச் சரபம், தண்டபாணி சுவாமிகள் | இயற்றிய | அறுவகை இலக்கணம் மூலமும் | புலவர், ப,வெ, நாகராசன் அவர்களின்உரையும் நிறைவேறின, |
|
|