| 	தொடுகடல் உடுத்த தொல்நில மகள்மலைப் | 
|   | 	படுகலன் நாப்பண் பதித்தநன் மணியில் | 
|   | 	பொலிதரு பல்வளப் புகலிமா நகர்வயின் | 
|   | 	கலிமறை பயில்தரு கவுணியர் குலத்தில | 
|   | 	நலன்உறத் தோன்றிய ஞானசம் பந்தன் | 
|   | 	பலமுரண் மரீஇய பறிதலை அமணரைப் | 
|   | 	போக்கிய ஞான்றில் புறநெறிக் கூற்றை | 
|   | 	நீக்கி உய்வான் நிறுவிய முறையில் | 
|   | 	திறம்பினர் தமையும் தெருட்டும் பொருட்டுஈண்டு | 
|   | 	அறம்பிழை படாவிதத்து அறுவகை இலக்கணம் 			  (10)  | 
|   | 	சிறக்க இயற்றுஎனச் செந்தில்எம் பெருமான் | 
|   | 	திறத்தகை உலவாச் சிந்தையில் தெரிப்ப | 
|   | 	மறக்கொணா அவன்இரு மலர்அடி வழுத்தித் | 
|   | 	துறக்கொணா விதிகளைத் துகள்அறக் கூறித் | 
|   | 	திருவுறு மாமலைச் சினகரத் தின்கண்  | 
|   | 	அருமைசால் புலவோர்	அனைவரும் வியப்ப | 
|   | 	உவமைஇல் பெரியோர் உளம்நனி உவப்ப | 
|   | 	நுவலிய தமிழ்ப்புது நூல் அரங் கேற்றினன்; | 
|   | 	திருவளர் பொதியைச் செழுந்தமிழ்த் தீஞ்சுவை | 
|   | 	பெருகியது எனவரு பீடுஉறு பொருநையும்				   (20)  |