கட்டளைக் கலித்துறை | | இலக்கிய ஐந்து முகன்அடி | | யார்ஐந்து இலக்கணங்கள் | | துலங்கவைத் தார்என்று அறியாமல் | | நான்முகன் தொண்டு கொண்டு | | கலங்குறு சாரணர் ஒத்துஉரைத் | | தார்; அயிற் கந்தன் அன்புஆம் | | நலம்கொள்எங் கோன்முறை கோடாதுஇவ் | | வாறு நவின்றனனே. |
| வண்ண விருத்தம் | | தனதனாதந்த தனதனதனத்தன தன்னதானா | | தொழுதுவேலன்பொன் அடிமலர்களைத்தினம் | | நண்ணும்மேலோர் | | துகள்இலாஐந்து கரமுறுகளிற்றிணை | | எண்ணிவாழ்வோர் | | மழுவுளான்அன்பு பெருகியமனத்தினர் | | கன்னியாயே | | வளரும்மாதங்கி முதலினர்தமைத்துதி | | பண்ணும்வாயோர் | | குழுவெலாம்நம்பும் அறநெறிஎனத்திகழ் | | தன்மையாலே | | குருஎனநின்ற பெரியவர்திருப்புகழ் | | உண்மையாலே | | முழுநிலாவென்ற பொடியணிஉடற்கொளும் | | வண்மையோனாம் | | முருகதாசன்றன் அறுவகைஇலக்கணம் | | நன்மையாமே. |
| கோபாலசமுத்திரம் வித்துவான் சண்முகதாசப்பிள்ளை அவர்கள் இயற்றியது | | | தனதன தனத்ததன,,,,,,,,,,,,,,,தனனதன தானனா | | சிறுதடி பிடித்துடலம் முழுவதும் வெளுத்தபொடி | | திகழ்தரு சிறப்புடைய செழியகுரு நாதனே | | மறுவரு சகத்தில்ஒரு முரகரி எனப்பெரிய | | வளமது பெறக்கருணை வழியிலுறு மாதவா |
|
|
|