|  | பூதலம் புகழும் பொதிய மால்வரைச் | 
|  | சீதவார் பொழிலில் செழுமுகில் பொழிந்த | 
|  | தெண்ணீர்ப் பெருக்கம் தேனொடு கலந்து | 
|  | வெண்ணீற்று அணிதிகழ் மேலோர் பலரும் | 
|  | பரவுசீர்க் குறுமுனி பயந்தமுத் தமிழ்என | 
|  | உரமொடு தொனித்துஆங்கு உறுபொருள் பலகவர்ந்து | 
|  | அம்மலைக்கு அணிந்த அணிஎன அவிர்வுற்று | 
|  | எம்மனோர் வழுத்தும் இயல்புடன் உலகில் | 
|  | பல்லுயிர் வளர்க்கும் பண்புறீஇ நடந்து | 
|  | தொல்லைமா கடலில் தோய்தரு பொருநைத் (10) | 
|  | திருநதி நடுவில் செம்பொற் கோவில் | 
|  | மருவிய உருமா மலைஅமர்ந்து அருளிய | 
|  | முழுதுணர் புலவன் மூவிரு முகத்தும் | 
|  | விழுமிய குறுநகை விளங்க விற்பனர் | 
|  | பெறுநலம் பலவும் பேணும் பெற்றியின் | 
|  | அறுவகை இலக்கணம் அருணை யூரன் | 
|  | அன்னோர் தேறும் அருந்திறல் திருப்புகழ் | 
|  | ஒன்னார் வெருளும் ஒண்பொருள் வண்ணம் |