அறுவகையிலக்கணம்551
மழுக்கரன் அருள்குகன் மலர்ச்சரண் பணிவோன்
 அழுக்காறு உடையபா வலர்க்குஇடி யேறுஅனான்
 அருண கிரிஇவண் அவதரித் தான் எனும்
 பெருமைசேர் புகழ்பெறு பேர்அரு ளாளன்
(30)
 வருக தாசர்கள் எனவழி பார்த்தருள்
 முருக தாச முனிமுழு மணியே.
குட்டந்தீர்த்ததுறை இராமாநுஜ கவிராயர் அவர்கள்
இயற்றியவை.
நேரிசை வெண்பா
போற்றும் தமிழால் புதிதாம் திருப்புகழ்நூல்
 சாற்றும்இந்த உண்மைத் தவத்தோனை-வேற்றுமைசேர்
 வெங்கட் கொடியவர்தாம் வேறுஎன்ன சொன்னாலும்
 எங்கட்கு அருணகிரி யே.
நிலைமண்டில ஆசிரியப்பா
பூதலம் புகழும் பொதிய மால்வரைச்
 சீதவார் பொழிலில் செழுமுகில் பொழிந்த
 தெண்ணீர்ப் பெருக்கம் தேனொடு கலந்து
 வெண்ணீற்று அணிதிகழ் மேலோர் பலரும்
 பரவுசீர்க் குறுமுனி பயந்தமுத் தமிழ்என
 உரமொடு தொனித்துஆங்கு உறுபொருள் பலகவர்ந்து
 அம்மலைக்கு அணிந்த அணிஎன அவிர்வுற்று
 எம்மனோர் வழுத்தும் இயல்புடன் உலகில்
 பல்லுயிர் வளர்க்கும் பண்புறீஇ நடந்து
 தொல்லைமா கடலில் தோய்தரு பொருநைத்
(10)
 திருநதி நடுவில் செம்பொற் கோவில்
 மருவிய உருமா மலைஅமர்ந்து அருளிய
 முழுதுணர் புலவன் மூவிரு முகத்தும்
 விழுமிய குறுநகை விளங்க விற்பனர்
 பெறுநலம் பலவும் பேணும் பெற்றியின்
 அறுவகை இலக்கணம் அருணை யூரன்
 அன்னோர் தேறும் அருந்திறல் திருப்புகழ்
 ஒன்னார் வெருளும் ஒண்பொருள் வண்ணம்