முதன்மொழிப் பொருத்தம்
   
1. மங்கலஞ் சொல்லெழுத் தெண்ணிய தானம் வருமிருபாற்
பொங்கிய வுண்டி வருணம் பகுத்திடு நாட்பொருத்தம்
தங்கிய நாற்கதி யெண்கண மென்று தமிழ்தெரிந்தோர்
இங்கிவை பத்தும் முதன்மொழி யாமென் 1றியம்புவரே.

     (உரை I). எ-து, சூத்திரம்; எ-ன், மங்கலம் முதல் கணம்
ஈறாகக் கிடந்த பத்தும் முதன்மொழி யென்பது உணர்த்......று.
அவைதாம் மங்கலம், சொல், எழுத்து, தானம், பால், உணவு,
வருணம், நாள், கதி, கணம் என இவை பத்தும் எ - று.

     (உரை II). ஒருவன் ஒரு பிரபந்தம் பாடுமிடத்து
மங்கலம்......கணம் என்று சொல்லப்பட்ட பத்துவகைப் பொருத்தமும்
பிரபந்த முதற்சீர்க்கண் உண்டாக்க வேண்டுமென்று சொல்லுவர்.

     (கு - ரை.). இருபால் : ஆண் பெண் அலி எனப் பால்
மூன்றாக (சூ. 7) இருக்க இங்கே இருபால் என்றது முதன்மொழிப்
பொருத்தத்துக்கு ஏற்ற ஆண் பெண் பால்களை நினைத்தென்க.
பொருத்தமென்பதை இடைநிலை விளக்காகக் கொண்டு மங்கலம்
முதலிய ஏனை ஒன்பதனோடுங் கூட்டுக. நாற்கதி ; சூ, 20, 21.
எண்கணம் - எட்டுக்கணம் ; 22-3. (1)


     (பி - ம்.) 1 ‘றியம்பினரே’