| 25. 
             | 
          உன்னுந் 
            தசாங்க மொருசீ ரதனு ளுரைப்பதன்றிப் 
            பின்னின்ற சீரொடு சேர்ந்து பிளவு படிற்பிழையாம் 
            இன்னும் மவைதாம் புணர்மொழி யாயின் இயல்புபெறும் 
            மின்னும் வெளியுந் துடியு நிகரிடை மெல்லியலே. | 
         
       
           (உரை 
        I). எ - ன், தசாங்கங்கட்கு எய்தியதோர் நன்மை  
        உணர்த்........று. 
         
             மன்னர் இயற்பெயருக்குத் தசாங்கம் ஒரு சீரினுள்  
        உரைப்பரென்பது : பிளந்து சீரிற் பெய்யினும் வரையார், புணர்ந்தே  
        மொழிவ ராதலாலே. பாட்டுடைத் தலைமகன்றன் தசாங்கமாகிய  
        பத்தும் ஒரு சீர்க்கண் அல்லது அறுபடுமாயின் அவை குற்றமாம்.  
        அவையே புணர்மொழிப் பெயராயின் மொழியிறுதிச்சீர் நிற்கப்  
        புணர்ப்பினும் குற்ற மாகாது எ - று. 
         
             (உரை II). தசாங்கமென்று சொல்லப்பட்ட 
        மலை......ஆணை  
        என்னும் பத்துச் சொல்லும் பிரபந்தச் சாயையில் வைத்துப் 
        பாடுமிடத்து 
        ஒவ்வொன்று ஒவ்வொரு சீரிலேயே வைத்துப் பாடுவது  
        உத்தமமாம். இப்படி அமையாமல் இரண்டு சீரோடு கூடிப் பிளவுபட்டு 
        வரிற் குற்றமாம் எ - று. 
         
             (கு - ரை.) இதுவும் முன் சூத்திரமும் 
        உரை Iல் முறையே 24,  
        8 ஆம் சூத்திரங்களாகக் காணப்படுகின்றன. அவ்வுரையில்  
        உன்னுந்தசாங்க (சூ. 25) என்றதனோடு பொருத்தவியல் முற்றுப்  
        பெற்றுள்ளது. இயலின் ஈற்றில் உரையாசிரியர், இவ்வோத்து முதன்  
        மொழிக்கண் வருவனவை யிற்றுக்கு இலக்கணம் ஆராய்தலின்  
        முதன்மொழி யோத்தென்னும் பெயர்த்து ; இதனுள் தசாங்க வியலும்  
        ஆராய்ந்த தென்னையோ வெனின், முதன் மொழி வந்த வாற்றானே  
        பெயர் பெறுதல், நூல் நெறியாய்ப் பொதுச் சொற்றலைமையானும்  
        பேர் பெறுதலுந் தக்கதெனக் கொள்க என்று குறித்துள்ளார்.(25) 
         
         
        
   |