|
சொற்
பொருத்தம்
|
|
|
3.
|
*கங்கையு
மானுங் கடுக்கையுந் திங்களும் காப்புடைய
துங்கன் முகினிற வண்ணனும் வேலையிற் றொல்கதிரும்
ஐங்கரத் தற்புதன் றன்னையு மாறு முகத்தனையும்
பங்கயத் தோனையுங் கூறுக பாவிற் பரிவுடனே. |
(உரை
II). எ - து. சொற்பொருத்தம் ஆமாறு உணர்த்...று.
ஒரு பிரந்தம் பாடுமிடத்து முதற்கண் கொலை முதலாகிய
சொற்கள் வாராமல் கங்கையையும் மானையும் கொன்றை
மாலையையும் சந்திரனையும் தரித்த அரனையும், நெடுமாலையும்,
ஆதித்தனையும், ஐங்கரக் கடவுளையும், ஆறு முகத்தானையும்,
பிரமனையும் முன்னாக வைத்துப் பாட வேண்டும் எ - று.
(கு - ரை) இக்காரிகை சிறப்புடையதாகத்
தோற்றவில்லை.(3)
|