ஆனைவிருத்தம் முதலியன, ஊர் வெண்பா
   
41. ஆனை குதிரை யெழில்வேல்வில் வாள்குடை
                            கோலிவற்றின்
ஈனமி னாடு நகரத் திறமென்பர் 1மேவியல்பால்
ஆன திறத்தா சிரிய விருத்த2மீ ரைந்துவந்தால்

ஊனமில் வெள்ளைபத் தூர்வெண்பா வாக
                           உரைப்பர்களே.

     (உரை I). எ - ன். ஆனை விருத்தமும் குதிரை விருத்தமும்
வாள் விருத்தமும் குடை விருத்தமும் செங்கோல் விருத்தமும் வில்
விருத்தமும் வேல் விருத்தமும்....ஆமாறுணர்த்.......று. பத்து நேரிசை
வெண்பாவினால் ஊரைப் புகழ்வது ஊர் வெண்பாவாம்.

“தானை பெற்ற தலைமை யோரையும்
ஏனைமுன் னோரைச் சொற்றன ராகத்
தானினி துரைப்பினும் தாழா தாகும்.”

     (உரை II). எ - து ஆனை விருத்தம்...................நாட்டு
விருத்தம் நகர விருத்தம் என்று சொல்லப்பட்ட பிரபந்தம் ஒன்றுக்
கொன்று பப்பத்து ஆசிரிய விருத்தம் பாடுவது இந்த வகையிற்
பிரபந்தமாம்..........................எ - று.     

     (கு - ரை).
ஆனை, குதிரை முதலியன பொருளாக
வெண்பாவினாலும் பாடுதல் உண்டு. அவை ஆனைப்பா, குதிரைப்பா
வென்று வழங்கப்பெறும் (பிரபந்தத். க. 15.)


     (பி - ம்.) 1 ‘ மேவிலப்பால்’ 2 ‘ மீரைந்தால் வரின் ’ (16)