|   | 
           
             அரசன் 
              விருத்தம் 
           | 
         
         
          |   | 
            | 
         
         
          | 51. 
             | 
          *அரசன் 
            விருத்தங் கலித்துறை யீரைந் தகன்மலைமேல் 
            விரவிய நாடு நகர்சிறப் பாய விருத்தமுப்பான் 
            உரைசெய் கலித்தா ழிசையும்வாண் மங்கலம் ஓதுவது 
            புரவல ராயவர்க் காமென் றுரைப்பர் புலவர்களே. | 
         
       
           (உரை 
        II). எ - து பத்துக் கலித்துறையும், முப்பது  
        விருத்தமும், கலித்தாழிசையுமாக மலை [கடல்] நாடு வருணனையும்,  
        நகர் வருணனையும் [நிலவருணனையும்] பாடி, வாள்மங்கலமும்  
        தோள் மங்கலமும் பாடி முடிப்பது அரசன் விருத்தமென்னும்  
        பிரபந்தமாம் எ - று. இது முடிபுனைந்த மன்னர்க்குப் பாடுவது. 
         
             (கு - ரை). அரசன் விருத்தத்தைப்பற்றிய 
        குறிப்பு வெண்பாப்  
        பாட்டியல் முதலிய பழைய பாட்டியல்களில் இல்லை. பிரபந்ததீப  
        ஆசிரியர், நவநீத நடனார் கூறியபடியே இப்பிரபந்த  
        இலக்கணத்தைக் குறிக்கிறார்; அரசன் விருத்தமே ஐயிரு கலித்துறை,  
        விருத்தமுப்பான் வெண்கலித் தாழிசை, இவற்றா லிறைவ னெழிலூர்  
        மலை கடல், வாண்மங் கலந்திண் டோள்மங் கலமுதல், வருணனை  
        யெல்லாம் வகுத்துப் பாடலே என்பது அது. (26)  
         
   |