|   | 
           
             மருட்பாப் 
              பிரபந்தம் 
           | 
         
         
          |   | 
            | 
         
         
          | 55. | 
          புறநிலை 
            வாயுறை வாழ்த்துப் 1புவியில் ஒருவன்செவி 
            யறிவே யுறுத்த லகப்புறக் கைக்கிளை ஆனவிந்த 
            நெறியிற் பொருள்களை யன்றி மருட்பா நிகழ்த்தலினால் 
            அறியவிந் நாற்செய்யு ளல்லாத பாவினும் ஆமென்பரே. | 
         
       
            (உரை 
        I). எ - ன், மருட்பாவுக்குரிய பொருள்  
        ஆமாறுணர்த்..............று.      
         
             (இ - ள்).புறநிலை 
        வாழ்த்து, செவியறிவுறூஉ, கைக்கிளை,  
        வாயுறை என்னும் நான்கு பொருளின் மேலும் மருட்பா வரும்  
        என்பதூஉம், இப்பொருண்மேற் பிற செய்யுளும் வருமென்தூஉம் ஆம்  
        எ - று. 
         
             (உரை II). மருட்பாப் 
        பிரபந்தம் பாடுமிடத்துப் புறநிலை  
        வாழ்த்து மருட்பாவும் கைக்கிளை மருட்பாவும் வாயுறை வாழ்த்து  
        மருட்பாவும் செவியறிவுறூஉ மருட்பாவும் என்று நான்கு வகை  
        மருட்பாவினாலும் பாடப்படுவது மருட்பாப் பிரபந்தமென்று  
        வழங்கப்படும் எ - று. 
         
             இது பாடுமிடத்துத் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும்  
        முடிபுனைந்த மன்னர்களுக்கும் பாடலாம். குறுநில மன்னருக்கும்  
        குடும்ப சகிதமாயிருக்கிறவருக்கும் பாடலாகாது. 
         
       
           (பி - ம்.) 
      1 புலமில் (30) 
   |