இதுவுமது
   
80. வாணிபஞ் செய்த லுபகார மாசாரம் வாய்ந்த செயல்
பேணி யுழுத லிருபிறப் பாளர் 1நெறிவழுவா
ஆணை வழிநிற்ற லானிரை போற்றல் அகன்றவல்குற்
பூண்முலை யாயிவை வேளாண் குடிக்குப் புகன்றனரே.

     (உரை I). எ - ன், இதுவும் சூத்திரர்க் குரியன சில
உணர்......று.

     (இ - ள்). வாணிபம் செய்தல், உபகாரம் ஆசாரம் வாய்ந்த
செயல், உழவைப் பேணல், இருபிறப்பாளர் நெறிவழுவாமல் அவர்
ஏவுதலைச் செய்தல் ஆனிரையைப் போற்றல் இவை
வேளாண்டொழில் எ - று.

     (உரை II). எ - து, வேளாளர் அறுவகைத் தொழில்.....
பசுக்களை வளர்த்தல், தானம் பண்ணுதல், வாணிபஞ்செய்தல், உழவு
பயிர் செய்தல், மன்னருக்கு இறை யிறுத்தல், வேதநெறிவழுவாத
ஒழுக்கத்துடனே தன்னுடைய சாதி மார்க்கம் தவறாதே இப்படி
இருப்பது வேளாளர்க்கு இயல்பாம் எ - று.


     (பி - ம்.) 1 ‘உரை வழுவா ’ (12)