உவமிக்கும் உவமைகள்
   
85. 1மானி னிளங் கன்று மஞ்ஞையின் பிள்ளை மதிக்குழவி
2தேனி, னமுதந்தெள் ளாநற வஞ்செழுங் கற்பகப்பூங்
கானிற நீர்வல்லி கல்லாத கிள்ளை கரும்பின் முளை
ஊனிற வேற்கண் மடவார்க் கியைந்த உறுப்புக்களே.

     (உரை I).
எ - று, அரிவையர்கட்குப் பருவத்திற்கு உவமை
யுணர்த்...........று.

     (இ - ள்), மானின் கன்று, மயிலின் பிள்ளை...........தேனின்
அமுதம், தெள்ளாநறவம், கற்பகக்கன்று, நீர்வல்லி, கல்லாத கிள்ளை,
கரும்பின் முளை என இனையன மகளிர்க்கு ஓதும் முறைமை எ - று.

     (இவை) இளைய மகளிர்க்கே கொள்க, என்னெனில், மேல்
வரும் சூத்திரத்தில் அரிவை முதலாயினர்க்கென்பர்; ஆதலின் ஈண்டு
உரைத்தன பேதை முதலாயினார்க்கு என்ப.

      (கு - ரை). பேதை முதலிய இளம் பருவமாதல் பற்றித்
தெள்ளாநறவம் என்றார்; தெள்ளா - தெளிவடையாத. உலா நூல்களில்
பேதைப் பருவ மகளிரை வருணிக்குமிடத்தில் மான்கன்று முதலிய
உவமைகளைப் புலவர் எடுத்தாளுதல் மரபு.

     (பி - ம்.) 1 ‘மானிற மான்கன்று’ 2 ‘தேனிற வின்பமுந்
தெள்ளா நறவுஞ் செழுங்கற்பகக்’ (17)