|   | 
           
             உவமிக்கும் 
              உவமைகள் 
           | 
         
         
          |   | 
            | 
         
         
          | 85. | 
          1மானி 
            னிளங் கன்று மஞ்ஞையின் பிள்ளை மதிக்குழவி 
            2தேனி, னமுதந்தெள் ளாநற வஞ்செழுங் கற்பகப்பூங் 
            கானிற நீர்வல்லி கல்லாத கிள்ளை கரும்பின் முளை 
            ஊனிற வேற்கண் மடவார்க் கியைந்த உறுப்புக்களே. | 
         
       
       
           (உரை I). எ - று, அரிவையர்கட்குப் பருவத்திற்கு உவமை  
      யுணர்த்...........று. 
       
           (இ - ள்), மானின் கன்று, மயிலின் 
      பிள்ளை...........தேனின்  
      அமுதம், தெள்ளாநறவம், கற்பகக்கன்று, நீர்வல்லி, கல்லாத கிள்ளை,  
      கரும்பின் முளை என இனையன மகளிர்க்கு ஓதும் முறைமை எ - று. 
       
           (இவை) இளைய மகளிர்க்கே கொள்க, என்னெனில், மேல்  
      வரும் சூத்திரத்தில் அரிவை முதலாயினர்க்கென்பர்; ஆதலின் ஈண்டு  
      உரைத்தன பேதை முதலாயினார்க்கு என்ப.  
       
            (கு - ரை). பேதை முதலிய இளம் பருவமாதல் 
      பற்றித்  
      தெள்ளாநறவம் என்றார்; தெள்ளா - தெளிவடையாத. உலா நூல்களில்  
      பேதைப் பருவ மகளிரை வருணிக்குமிடத்தில் மான்கன்று முதலிய  
      உவமைகளைப் புலவர் எடுத்தாளுதல் மரபு. 
       
       
           (பி 
      - ம்.) 1 மானிற மான்கன்று 2 தேனிற 
      வின்பமுந்  
      தெள்ளா நறவுஞ் செழுங்கற்பகக் (17) 
   |  
 
	
				
				 | 
				 
			 
			 |