| 86. | 
          முருக 
            னுவமைமுந் நான்கு 1முதலெண் ணிரண்டுவரை 
            அரசர்க் குரித்தவர் தம்மோ டுவமையல் லார்க்குரித்துத் 
            திருவோ டுவமை 2யரிவை முதலிய சேயிழையார் 
            பருவத் துரித்தென்ன வோதுவர் தொன்னூற் பருணிதரே. | 
         
       
       
           (உரை I). எ - ன், இதுவும் உவமிக்கும் உவமை  
      உணர்த்.........று. 
       
           (இ - ள்). அரசரைப் பன்னிரண்டு முதற்பதினாறு 
      (பிராயம்)  
      வரை முருகனோடு உவமித்தலாம். அல்லார்க்கு அரசன்தான்  
      உவமையாம். அரிவை முதலாயினோரைத் திருவோடு உவமித்தல்  
      ஆம் எ - று. 
       
       
           (பி 
      - ம்.) 1 முதலெட் டிரண்டரசர்க்குரிய குமர னவனோ 
      டுவமைக் குரித்தென்னலாம் 2 பெதும்பை முதற்பெண்கள்  
      சேயிழையாய் (18) 
   |  
 
	
				
				 | 
				 
			 
			 |