86. முருக னுவமைமுந் நான்கு 1முதலெண் ணிரண்டுவரை
அரசர்க் குரித்தவர் தம்மோ டுவமையல் லார்க்குரித்துத்
திருவோ டுவமை 2யரிவை முதலிய சேயிழையார்
பருவத் துரித்தென்ன வோதுவர் தொன்னூற் பருணிதரே.

     (உரை I).
எ - ன், இதுவும் உவமிக்கும் உவமை
உணர்த்.........று.

     (இ - ள்). அரசரைப் பன்னிரண்டு முதற்பதினாறு (பிராயம்)
வரை முருகனோடு உவமித்தலாம். அல்லார்க்கு அரசன்தான்
உவமையாம். அரிவை முதலாயினோரைத் திருவோடு உவமித்தல்
ஆம் எ - று.

     (பி - ம்.) 1 ‘முதலெட் டிரண்டரசர்க்குரிய குமர னவனோ
டுவமைக் குரித்தென்னலாம்’ 2 ‘பெதும்பை முதற்பெண்கள்
சேயிழையாய்’ (18)