பக்கம் எண் :

372மாறனலங்காரம்

இஃ திரண்டாமடியினிறுதி தனிச்சொற்பெற்று நேரிசைவெண்பாவிற் சிறிது வேறுபட்டு மூன்றுவிகற்பத்தான்வந்த இன்னிசை வெண்பா. அலங்காரம் இதுவுமதுஎன்னை? முதலே யுவமையும், புயத்துள்ளாங்கரும்பென்ன மாட்டேறில்லாவுருவகமும் (?) கரும்பு முல்லையரும்பு செவ்வாய் வெண்ணகையென்ன நிரனிறையும் விரோதமும், தன்கட்டோன்றியபுணர்வு பற்றிய வுவகையும் வந்தமையாலென்றறிக.

முகத்தாமரையைமுழுதடக்கலோடென்
னகத்தாமரைகவர்ந்ததற்புதம்பொற்பூண்முலையாய்
காவிமலரனையகண்ணிணையைக்கைக்காந்தட்
பூவின்மறைத்திடுமிப்போது
(584)

அலங்காரம் இதுவு மது. இதனுள், முகத்தாமரை, கைக்காந்தள் எனவே உருவகமும், முகத்தாமரையை முழுதடக்கலோடு என் அகத் தாமரையையுங் கவர்ந்ததெனவே அசங்கதியும், காவிமலரனையவெனவே உவமையும், கைக்காந்தள் காட்சிப்பொருளல்லாத அகத்தாமரையையுங் கவர்ந்ததெனவே யற்புதமும், உவகையுட்சார்ந்த வியப்பும் வந்தமையா லென்றறிக. பகுதி - இடந்தலை. துறை - நாணிக்கண்புதைக்கவருந்தல். பா - இரண்டுவிகற்பத்தால் வந்த இன்னிசை வெண்பா.

மாதராய்தென்னரங்கன்மால்வரைவாழ்மாதராள்
காமனிரதியெனுங்காட்சியாள்--காமவேள்
பூவாளியென்பவற்றுண்மன்னுயிருண்பூவாளி
கண்டார்நிறையினையுண்கண்.
(585)

அலங்காரம் இதுவுமது. இதனுள் உவமையும், அதிசயமும், சொற்பின்வருநிலையும், வியப்பென்னுஞ் சுவையும் வந்தமையா னறிக. பா - அடிதோறும் ஒரூஉத்தொடைபெற்று நேரிசைவெண்பாவிற் சிறிது வேறுபட்டுவந்த இன்னிசைவெண்பா. பகுதி - சேட்படை. துறை - அவயவங்கூறல்.

(165)

63-வது சங்கீரணம் முற்றும்.

-------