நெஞ்சத்தடங்காதநேரிழைநின்னோடுவரிற் கஞ்சத்தடங்காண்கடம். | (816) |
இது காமமிகுதியான்வந்த மாறுபடுபொருண்மொழி. அச்ச மிகுதியான்வருவனவும் வந்தவழிக் கண்டுகொள்க. (5) 305. | உரியசொற்பலபொருளொன்றினொன்றாதன பிரிபொருட்சொற்றொடரெனும்பெயருடைத்தே. |
(எ-ன்) முறையானே பிரிபொருட்சொற்றொடரெனும் வழுவாமா றுணர்-ற்று. (இ-ள்) செய்யுளகத்துப் புலவனாற்சேர்த்தற்குரிய பலசொற்களினது பலபொருள்களு மொன்றினோடொன்று பொருந்தாதனவாகச் சொல்லப்பட்டது பிரிபொருட்சொற்றொடரெனும் பெயரினையுடைத் தென்றவாறு. எனவே வேறுவேறுநோக்கப் பொருளுடையனவாய்க் கூட்டிநோக்க வொருபொருளாக வுரைக்கப்படா தென்றவாறு. இதனுள் ஒன்றென்பது சொல்லெச்சம். கங்கைக்குக்கன்னிநெடுங்காதங்கஞ்சமலர் மங்கைக்குமாயோன்மணவாள--னங்கைக்கு ளெட்டாவுறுப்புடலுள்யாதுமிலைக்காமனெனப் பட்டானிரதிபதி. | (817) |
இது பிரிபொருட்சொற்றொடர். இதனுள், பலசொல்லுந் தனித் தனிநோக்கப் பொருளுடைத்தாய்க் கூட்டிநோக்கப் பொருளன்றாதல் கண்டுகொள்க. (6) 306. | அதுவே, கள்ளுண்மாந்தர்பித்தரிற்கடிவரையில. |
(எ-ன்) இதுவும் முன்பெய்திய திகந்துபடாமற் காக்கின்றது. (இ-ள்) முன்மொழிந்த பிரிபொருட்சொற்றொடர் கள்ளுண்டு களித்தமாந்தராற் கூறுமிடத்தினும் பித்தினான்மயங்கப்பட்டார் கூறுமிடத்தினும் வழுவென்றுநீக்கப்படா தென்றவாறு. கள்ளிதனிற்பிறந்தகள்ளிற்கடுந்தேறல் வள்ளிதனைப்பெற்றபுளிமாந்தேறல்--வெள்ளிமலை |
|