ஆளி முதலிய விலங்கின்கூட்டத்தைக் குறைத்தபின்னர் ; அயர்வுயிர்த்தற்கு.... சார்வுழி-அவற்றைத் தொடர்ந் தோடி யாடின வருத்தம் போக்குதற்குப் பொற்றகடுபொதிந்த நேமியையுடைய குதிரைபூண்ட தேரோடும் வென்றி விட்டுநீங்காத பாகன் சுவடுபார்த்து வருவனென வுட்கொண்டு புறநகர்ப்பொதும்பர்க் குளிர்ந்தநிழலைநோக்கி யணுகின காலத்து ; பெண்ணியல் பெருக்கி யெதிர்தலும் - பெண்ணின திலக்கணத்தைத் தனதாகப் பெருப்பித் தெனதெதிர்நிற்ப ; யாவதிவ்வுருவென....... காண்டொறும்-மலர்மகள் முதலாயினோருருவினுள் யாதுதா னிவ்வுருவமென நின்னொடுங்கூடி நீக்கமின்றி யுசாவாநிற்ப வுள்ளேநிகழு மெழுகையுந் தொடர்ந்தவன்பு பால்வரைகடவுளினன்புடன்கூடி யிக்காவகத் திவ் வுருவ மலர்மகண்முதலாயோர் காந்திகளெல்லாந் திரண் டேகமாகக் குடியிருப்பதேப ரிடவகைதானென் றுணர்வினு ளொன்றுவிப்ப வந்நிலையே கண்க ளிவ்வுருவினை விருப்புற் றுட்கொண்ட விருப்பமிகையானே நோக்குந்தொறும் ; புகுமுகம்புரிதலின்...... அமைநலன்-எனது நோக்கிடமாகப் புகுந்து தன்கண் விரும்பிநோக்குதலால் யான் புணர்ச்சிமேன் மனம்வைப்பப் புகுமுகம் புரிந்தபின் பொருளிலக்கணந் திரட்டியுரைத்த பொறிநுதல்வெயர்த்தன் முத லிருகையுமெடுத்த லீறாய பதினொருமெய்ப்பாடு மொன்றன்பின்னொன்று தொடர்புடைத்தாகத் தோற்றிக் கண்டுற் றுண் டுயிர்த்தலாகிய நான்கோடு மென்மேல்வைத்த கருணையுடைத்தாய் மிழற்றுமோசையு மெனக் கேட்பதுமாக வைம்புலன்களையு மென தைம்பொறிகளும் ஒரு காலத் திலவமலர்போன்ற வதரமொன்றின்கண் ணுகர்ந் தாக்கமெய்த விருதலையினும் வழிபடும் யாவரு மணுகாதபடிக் கேகாந்தமாக முழுத்த வின்பத்தை ; வண்டுழா........ பொன்னி-சுரும்புக ளாறுதாளி னாலுந் துவைப்ப முகைவிண்டு பரிமளத்தை மிகுப்பதாங் குளிர்ந்த துளபமாலிகையையுடைய அரங்கேசனது தடந்துறைவாய்ந்த திருக் காவிரியினடத்து ; திரைவரன்றெறி........... வாய்ந்தருண் மறை - பெரிய திருமுகத்துறைத்திரைகள் கொழித்தெறியுந் தரளத் திரணில விருளைத்துரந்து நிமிராநிற்பப் பரிமளப்பூவாகிய மெல்லிய அணையைவிரிக்கும் புன்னையின்கீ ழுயர்ந்த வழகொடுந் தாழ்ந்தசினைக ளாகிய திரையினுட் டோன்றி யளித்த விராசியத்தை ; யார் மனக் கொள்பவரே-யாமேயறிவதல்ல துலகத்துள் யாவ ரறிவரென்றவாறு. |