194. | ஊழிநெடுங் காலங்க ளோங்குசக்ர வாளமெனும் பாழிநெடும் பொருப்பவள்காற் பாடகமோ பார்த்திலனால். | (24) | | | | 195. | முந்தைவே தங்களே மொழிகின்ற திருவார்த்தை சிந்தைவே றற்றவர்தஞ் சிந்தனையே திருமேனி. | (25) | | | 196. | அறம்புரியு மகவாயில் காக்கின்ற தரும்போதம் புறம்புரியும் புறவாயில் காக்கின்ற பூதமே. | (26) | | | | 197. | சூர்மகளிர் கருணாதி யாகியன தூயமொழி ஏர்மகளிர் மருநிலமங் கியன்ஞான யோகமே. | (27) | | | | 198. | பங்கயா சனனறியாப் பான்மைத்தா லவள்பரிசின் றிங்கியா னிவ்வண்ண மெடுத்தியம்பத் தகுவதுவோ. | (28) | | | | 199. | ஏறுவணம் புள்ளாதி யெனக்கற்பித் திடுவேனோ ஏறுவணஞ் சிறந்ததவட் கின்னருட்போ தகமாமால். | (29) | | | | 200. | ஆழிமழுப் படையாதி யாயுதமற் றென்கோவென் ஏழுபிறப் பையுமெறிந்து மிளையாவன் பிலங்கவுமே. | (30) |
195. “வேதமவ டிருவாயி லோது கீதம் வேறுநினை விலர்காணு மேனி மேனி” அஞ்ஞவதைப். 196. காக்கின்ற - காக்கின்றவை. “பூதமவ டிருவாசல் காவ லாகும், போதமவ டிருமேனி காவ றானே” அஞ்ஞவதைப். 197. சூர்மகளிர் - யோகினிகள். கருணாதி - கருணை, முதிதை, மைத்திரி, நீதி, உபேட்சை என்பன ; “யோகினிகள் கருணாதி யான மாதர், யோக மரு நிலமாசின் ஞான யோகம்” அஞ்ஞவதைப். 198. “கோகனக னறியாத கோயில் கோயில் கூறரிய பெருவாழ்வை யாவர் கூற” அஞ்ஞவதைப். 199. ஏறு உவணம். ஏறு வணம் சிறந்தது - ஏறுதற்குச் சிறந்த வாகனமாக அமைந்தது ; அருட்போதகம் - அருளாகிய யானை. “கலையேறுவணங் களியன்னமெனக் கற்பித்திடவோ சொற்பித்ததுவா, மலையேறு வணங் கிளியன்புறவந் தருள்போதகமே யவள்வாகனமே” அஞ்ஞவதைப். 200. “பஞ்சாயுதமே திரிசூலமழுப் படையே யெனவோ பகைவெம் பிறவிக், கஞ்சாமுனெழுந் தருளாவெறியு மன்பேதிருவா யுதமாவதுவே” அஞ்ஞவதைப். |