213. | யாவ கைப்பல வுயிர்த்தொகுதி கண்டுபரவ எழுத ரும்பழ மறைப்பொருள் குறித்தபடியே மூவ கைப்படிவ மாகியழி யாதவொளியாம் மூல மாகிய முதற்பொருள் பரிந்தபரிசும். | (43) | | | | 214. | வெண்ணி லாவொளி துளும்புகயி லைக்கிரியின்மேல் விழிகி ழித்தநுத லுங்கரிய கந்தரமுமாய் அண்ண லாரினித மர்ந்தருளி வாசமலரோன் ஆதி யர்க்கற மலர்ந்தருள் சுரந்தபரிசும். | (44) | | | 215. | பரிதி வானவ னுடைத்திட வுடைந்ததிமிரப் படல மொத்திருள் பரந்திரிய வாலநிழலிற் சரியை நேர்கிரியை யோகமொடு ஞானமுழுதும் சனக ராதியர் தமக்கருள் சுரந்தபரிசும். | (45) | | | | 216. | முன்ப ராபர வுருத்தனில் விகாரமிலராய் முற்று ணர்ந்துருகி மும்மல விரோதமகலும் அன்ப ரானவர் நினைத்திடு முருக்கொடுபுகுந் தவர வர்க்குள மகிழ்ந்தருள் சுரந்தபரிசும். | (46) | | | | 217. | காடெ லாம்வரி நெடுங்கண்மயில் பின்புதொடரக் கைச்ச ரம்பொருத பன்றியொடு முன்புதொடரும் வேட வேடமு னெடுத்தருளி யன்றுபொருபோர் விசயன் மெய்த்தவ முடிப்பவருள் வைத்தவிரகும். | (47) |
213. “ஆதி மூலமொரு கோலமுமி லாதவடிவில் வகில லோகமு மறிந்தடையும் வண்ணமழகார், சோதி மூவடிவு கொண்டருளி யந்தமறை முன் சொன்ன தன்மைதெரி யும்பரிசு சொன்னதுணிவும்” அஞ்ஞவதைப். பி - ம். ‘ஏவகை’ 214. கந்தரம் - கழுத்து. “கயிலை மாமலையின் மேலினிதி ருந்தருளியக் கமல யோனிமுத லெக் கடவு ளர்க்குமருளான், மயிலை யேறிவரு மைந்தனுட னந்திமுதலா மற்றும் வந்தடைப வர்க்குமருள் செய்தவகையும்” அஞ்ஞவதைப். 215. பரிதிவானவன் - சூரியன். திமிரப் படலம் - இருட் பரப்பு. இருள் - அஞ்ஞானம். 216. “தன்ப ராபரம தானதிரு மேனிநிலையிற் சனன மின்றியொரு தன்மையினி னின்றருளியே, அன்ப ரானவர்க ணெஞ்சினி லுவந்தவடிவா யங்கு வந்தவர்க ளுய்யும்வகை செய்த வருளும்” அஞ்ஞவதைப். 217. மயில் - உமாதேவியார். விரகு - தந்திரம். |