288. | கூளி மூத்த குரங்கெனக் கையிலோர் கோல்பி டித்தே யிருமிக் குலைகுலைந் தேனை யோரிக ழக்கிழ மாகின்ற இளமை நாளு மியல்பென் றிருப்பனே. | (21) | | | | 289. | கோழை வாதம்பித் தென்கின்ற மூவரும் குடியி ருக்குங் குரம்பையிற் றானுழைந் தூழி யூழியுந் துச்சிலென் னாததில் உறைவ னென்ன வுவந்தே யிருப்பனே. | (22) | | | 290. | தவஞ்சு ருக்கிச்செய் தானஞ் சுருக்கிநற் றரும நன்னெறி தானுஞ் சுருக்குமே அவம்பெ ருக்கி யவலம் பெருக்கிமற் றரிய பாதக மைந்தும் பெருக்குமே. | (23) | | | | 291. | விண்ணி னூடும் வெதுப்பழல் போன்றெரி வெய்ய வன்னிரை யத்தும் விசையினால் மண்ணி னூடும் வருவதும் போவதாய் மாறி மாறி மணியூச லாடுமே. | (24) | | | | 292. | கற்ற றானுங் கருத்துறக் கற்றன கருத றானும் பிறர்க்கவன் காதலாற் சொற்ற றானு முணவு குறித்தலாற் சுருப நன்னெறி தோய்வதற் கல்லவால். | (25) | | | | 293. | 293. இன்ன தன்மை யிழுதை யரசனுக் கென்று மென்று மிரும்பவ மீண்டவே துன்னு துன்மதி மந்திரி சூழுமச் சூழ்ச்சி யார்க்குந் துணியப் படாததால். | (26) |
289. “புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுட், டுச்சி லிருந்த வுயிர்க்கு” (குறள், 340) என்பதும், ‘வாத முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு’ (பரிமேல். ) என்ற உரையும் இங்கே அறிதற்குரியன. 290. “அறஞ்சுருக்கு மவலம் பெருக்குமே” அஞ்ஞவதைப். 291. “நிரையத் தோடு நெடுவான் முகட்டொடுந், தரையத் தோடுந் தனியூச லாடுமே” (அஞ்ஞவதைப். ), “உருமாறிப் பவக்கடல்வீழ்ந் தூசலெனத் தடுமாறி யுழலு மாக்கள்” திருவிளை. 293. பவம் - பிறவி. ஈண்ட - அடைய. “இந்த மன்னனுக் கென்றும் பவங்கொள, வந்த துன்மதி மந்திரி யாகுமே” அஞ்ஞவதைப். |