அந்நிலத்திற்குப் பயப்பாடு வெளிப்படச் செய்யாமையின் உவமவிலக்கணத்துள் 1இதனையும் இலேசினாற் கொண்டாமென்பது. அற்றன்று; “மரபே தானும்.” (தொ. செய். 80) என்புழி, “நாற்சொல்லிய” லெனச் சொற்றன்மையுங் கூறப்பட்டமையின் உவமையாராய்ச்சியுள் அது2கூறானென்பது. 3உம்மை இறந்தது தழீஇயிற்று; என்னை? உயர்ந்ததன்மேற்றன்றி, உயர்பிழிபுடைத்தல்லாத தன்மையுவமையுங் கொள்க வென்றமையின். (34) [தடுமாறு உவமமும் உளவெனல்] 310. | தடுமா றுவமங் கடிவரை யின்றே. |
இதுவும் உவமத்திற்கேயாவதோர் இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று. இ--ள் : தடுமாறுவமம்--உவமையும் பொருளும் வேறு நிறீஇ இதுபோலும் இதுவென்னாது அவ்விரண்டனையும் 4ஐயுறச் சொல்லுந் தடுமாறுவமம், இனி அவ்வாறன்றி உவமையைப் பொருளாக்கியும் பொருளை உவமையாக்கியுந் தடுமாறச் சொல்லுதலும் தடுமாறுவமமெனப்படும்; கடிவரை இன்று--அவ்விரண்டும் உவமமென்று சொல்லற்பாட்டிற் கடியப்படா என்றவாறு. “அரிமல ராய்ந்தக ணம்மா கடைசி திருமுகமுந் திங்களுஞ் “செத்துத்--தெருமந்து வையத்தும் வானத்துஞ் செல்லா தணங்காகி யையத்து நின்ற தரா.” (பொய்கையார்) என்பதனுள் உவமையினையும் பொருளினையும் வேறுவேறு துணியாது ஐயுற்று வையத்தும் வானத்துஞ் செல்லாது; அராவென்றமையின் இது தடுமாறுவமமாயிற்று. “தளிபெற்று வைகிய தண்சுனை நீல மளிபெற்றார் கண்போன் மலரு--மளிபெற்ற
1. இது தன்மையணியுளடங்கும். 2. கூறானாகலின் என்பது என்றிருப்பது நலம். 3. உம்மை--உவமத்தன்மையும் என்றதிலுள்ள உம்மை. 4. உவமையுற என்றும் பாடம்: அது சிறப்பின்று. 5. செத்து--(ஒன்றாக) நினைத்து. |