100

பத்துப்பாட்டு

வரைமந்தி கழிமூழ்கக்
225கழிநாரை வரையிறுப்பத்
தண்வைப்பினா னாடுகுழீஇ
மண்மருங்கினான் மறுவின்றி
யொருகுடையா னொன்றுகூறப்
பெரிதாண்ட பெருங்கேண்மை
230யறனொடு புணர்ந்த திறனறி செங்கோ
லன்னோன் வாழி வெனவேற் குருசில்
மன்னர் நடுங்கத் தோன்றிப் பன்மா
ணெல்லை தருநன் பல்கதிர் பரப்பிக்
குல்லை கரியவுங் கோடெரி நைப்பவு
235மருவி மாமலை நிழத்தவு மற்றக்
கருவி வானங் கடற்கோண் மறப்பவும்
பெருவற னாகிய பண்பில் காலையு
நறையு நரந்தமு மகிலு மாரமுந்
துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுகி
240நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம் புகுதொறும்
புனலாடு மகளிர் கதுமெனக் குடையக்
கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து
சூடுகோ டாகப் பிறக்கி நாடொறுங்
குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை

 


226. (பி-ம்.) ‘நாடு கெழீஇ'

231. (பி-ம்.) ‘வெல்வேற் குரிசில்'

234. "பரந்துபடு கூரெரி கான நைப்ப, மரந்தீ யுற்ற" (நற். 177 : 1 - 2)

236. கருவி வானம் : "கருவி வானங் கான்ற" (சீவக. 725)

238 - 41. "நறுவீ நாகமு மகிலு மாரமும், துறையாடு மகளிர்க்குத் தோட்புணை யாகிய, பொருபுன றரூஉம் போக்கரு மரபின்" (சிறுபாண். 116 - 8)

"கொடுவாய்க்குயம் - கோடின வாயையுடைய அரிவாள்; ‘கூனி ........... அரிந்து' என்றார் பொருநராற்றுப்படையிலும்" (சிலப். 16 : 30, அடியார்.)

243. "வயங்கொள்வார் சாலிச் சூடும் வளர்ந்துபோய் வானைச் சூடும்" (திருவால. திருநகர. 9)

244. "குடகாற் றெறிந்த குப்பை வடபாற், செம்பொன் மலையிற் சிறப்பத் தோன்றும்" (பெரும்பாண். 240 - 41)