146
மணிநிரைத் தன்ன வனப்பின் வாயமைத்து
வயிறுசேர் பொழுகிய வகையமை யகளத்துக்
225கானக் குமிழின் கனிநிறங் கடுப்பப்
புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு தேம்பெய்
தமிழ்துபொதிந் திலிற்று மடங்குபுரி நரம்பிற்
பாடுதுறை முற்றிய பயன்றெரி கேள்விக்
கூடுகொ ளின்னியங் குரல்குர லாக
230நூனெறி மரபிற் பண்ணி யானாது
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை யெனவு
மிளையோர்க்கு மலர்ந்த மார்பினை யெனவு
மேரோர்க்கு நிழன்ற கோலினை யெனவுந்
தேரோர்க் கழன்ற வேலினை யெனவு
235நீசில மொழியா வளவை மாசில்
காம்புசொலித் தன்ன வறுவை யுடீஇப்
பாம்புவெகுண் டன்ன தேற னல்கிக்

227."ஆசில் பாட லமிழ்துறழ் நல்யாழ்"(பெருங். 1. 37 : 150) இலிற்றும்; புறநா. 68 : 8.

226 - 7."தீந்தே, னணிபெற வொழுகி யன்ன வமிழ்துறழ் நரம்பி னல்யாழ்"(சீவக. 722)

228."பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே"(புறநா. 21 : 11); பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தன்"(சிலப். 27 : 46)

229.இயம்-யாழ்: "இயம்வெளிப் படுத்தபி னிசை வெளிப் படீஇய"(பெருங். 1. 37 : 118)

232."வணங்குசிலை பொருதநின் மணங்கம ழகல, மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே"(பதிற். 63 : 4 - 5), "மகளிர் மலைத்த லல்லது மள்ளர், மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப"(புறநா. 10 : 9 - 10); "சோலைமயி லார்கடுணை வெம்முலைக டுஞ்சும், கோலவரை மார்பு"(சீவக. 283)

233.‘நிழன்று-நிழல் செய்து' என்பதற்கு இவ்வடி மேற்கோள்; சீவக. 1270, ந.

231 - 4.துதியால் நீதியைப் புகட்டல்: புறநா. 10.

235.நீசில மொழியாவளவை: "குறித்தது மொழியா வளவையின்"(முருகு. 281)

236புறநா. 383 : 9 - 11.

237."பாப்புக்கடுப் பன்ன தோப்பி" (அகநா. 348 : 7); அரவுவெகுண் டன்ன தேறலொடு " (புறநா. 376 : 14); "நச்சரா வெயிறுகதுவிய தனைய கடுநற"(குலோத். பிள்ளைத்.)