204
நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த்
தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றிச்
405சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பின்
இழுமென் புள்ளி னீண்டுகிளைத் தொழுதிக்
கொழுமென் சினைய கோளி யுள்ளும்
பழமீக் கூறும் பலாஅப் போலப்
புலவுக் கடலுடுத்த வானஞ் சூடிய
410மலர்தலை யுலகத் துள்ளும் பலர்தொழ
விழவுமேம் பட்ட பழவிறன் மூதூர்
அவ்வாய் வளர்பிறைச் சூடிச் செவ்வாய்
அந்தி வானத் தாடுமழை கடுப்ப
வெண்கோட் டிரும்பிணங் குருதி யீர்ப்ப
415ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தவியப்
பேரமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஆரா செருவி னைவர் போல
அடங்காத் தானையோ டுடன்றுமேல் வந்த
ஒன்னாத் தெவ்வ ருலைவிடத் தார்த்துக்


402-4. முருகு. 164-5.

405. (பி-ம்.) ‘நெடுமதில் வரைப்பு'

சுடும ணோங்கிய வரைப்பு: "சுடும ணோக்கிய நெடுநிலை மனை" (மணி. 3:127);"சுடும ணெடுமதில்" (பு. வெ. 113)
சுடுமண்: சிலப். 14:146; மணி. 18:33.

402-5. "மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப், பூவொடு புரையுஞ் சீரூர் பூவி, னிதழகத் தனைய தெருவ மிதழகத், தரும் பொகுட் டனையதே யண்ணல் கோயில்" (பரிபாடல், தி . 7); இராசகிரிய நகரத்தைத் தாமரை மலராகவும் அந்நகரின் உறுப்புக்களை அம்மலரின் உறுப்புக்களாகவும் பெருங்கதை (3. 3: 50-114)யிற் கூறியிருத்தல் இங்கே அறிந்து மகிழத்தக்கது.

407. (பி-ம்.) ‘சினைஇய'

407-8. "கோளிப் பாகற் கொழுங்கனித் திரள்காய்" (சிலப்.16:24)

415. "ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழிய" (புறநா. 2:15)

416. கொடுஞ்சி நெடுந்தேர்:பொருந. 163; மதுரைக். 752.

419. "ஒன்னாத் தெவ்வருலைவிடத்தொழித்த"(பெரும்பாண்.416);தார்த்தென" (மலைபடு. 386)