242

உயர்நிலை (332) வான் தோய் மாடத்து (333) கொடு பூண் மகளிர் - உயர்ந்த நிலைமையையுடைய தேவருலகத்தைத்தீண்டும் மாடத்துறையும் வளைந்த பேரணிகலங்களையுடைய மகளிர்,

328-9. கொன்றை மெல் சினை பனி தவழ்பவை போல் பைங்காழ் அல்குல் நுண் துகில் நுடங்க-கொன்றையிடத்து அரும்புகளையுடைய மெல்லிய கொம்புகளிலே பனிமாசுகிடந்து தவழ்கின்றவை போலப் பசிய மணிகள்கோத்த வடங்களையுடைய அல்குலிற் கிடக்கின்ற மெல்லிய துகில் அசைய,

330-31. மால் வரை சிலம்பின் மகிழ் சிறந்து ஆலும் பீலி மஞ்ஞையின் இயலி-பெருமையையுடைய பக்கமலையிலே மனவெழுச்சிமிக்கு ஆரவாரிக்கும் தோகையையுடைய மயில்போலே உலாவி.

331-3. [கால, தமனியப் பொற்சிலம் பொலிப்ப வுயர்நிலை, வாய்றோய் மாடத்து வரிப்பந் தசைஇ :]

தமனியம் கால பொன் சிலம்பு ஒலிப்ப வரி பந்து அசைஇ-பொற் பூண்களையுடைய கால்களிடத்தனவாகிய பொன்னாற்செய்த சிலம்புகள் ஆரவாரிப்ப நூலால்வரிதலையுடைய பந்தையடித்து இளைத்து,

334-5. [கைபுனை குறுந்தொடி தத்தப் பைபய, முத்த வார்மணற் பொற்கழங் காடும் :] முத்தம் வார் மணல் பைபய கை புனை குறு தொடிதத்த பொன் கழங்கு ஆடும்-முத்தையொத்த வார்ந்தமணலிலே மெத்தென மெத்தெனக் கையிற்புனைந்த குறுந்தொடியசையப் பொன்னாற்செய்த கழலைக்கொண்டு விளையாடும்,

மாடத்து (333) மகளிர் (321) நுடங்க(329) இயலி (331) ஒலிப்ப (332) அசைஇப் (333) பின்னர்க் கழங்காடும் (335) பட்டினம் (336) என்க;

இது வணிகரிருப்பைக் கூறிற்று.

படப்பையினையும் (321)வரைப்பினையும் (324) தெருவினையும் (332) இல்லினையு (327)முடைய பட்டின (336) மென்க.

336. பட்டினம் மருங்கின் அசையின்-பட்டினத்திடத்தே இளைப்பாறுவீராயின்,

முட்டு இல்-முட்டில்லையாக,

பெறுகுவி (345) ரென மேலே கூட்டுக.

337. பைங்கொடி நுடங்கும் பலர் புகுவாயில்-பசியகொடிகள் அசையும் கள்ளுண்பார் பலரும் புகுகின்ற வாயிலிடத்து,

338. [செம்பூத் தூய செதுக்குடைமுன்றில்:] தூய செ பூ செதுக்கு உடை முன்றில்-தெய்வத்திற்குத் தூவின செய்ய பூவாடலையுடைய முற்றத்தில்,