235 | கரைபொரு திரங்குங் கனையிரு முந்நீர்த் திரையிடு மணலினும் பலரே யுரைசெல மலர் தலை யுலக மாண்டுகழிந் தோரே அதனால், குணகடல் கொண்டு குடகடன் முற்றி யிரவு மெல்லையும் விளிவிட னறியா | 240 | தவலு மிசையு நீர்த்திரள் பீண்டிக் கவலையங் குழும்பி னருவி யொலிப்பக் கழைவளர் சாரற் களிற்றின நடுங்க வரைமுத லிரங்கு மேறொடு வான்ஞெமிர்ந்து சிதரற் பெரும்பெயல் திறத்தலிற் றாங்காது | 245 | குணகடற் கிவர் தருங் குரூஉப்புன லுந்தி நிவந்துசெ னீத்தங் குளங்கொளச் சாற்றிக் களிறுமாய்க்குங் கதிர்க்கழனி யொளிறிலஞ்சி யடைநிவந்த |
235. " கரைகொன் றிரங்குங் கடல்" (சீவக. 1063) ; கரை கொன் றிரங்கு கடல் புகைய" (கூர்ம. இராவணன்வதை. 5) 236. மணலைப்பன்மை சுட்டற்கு உவமித்தல் : " வடுவா ழெக்கர் மணலினும் பலரே " (மலைபடு, 556) ; புறநா. 9 : 11, 43 : 23, 55 : 21 , 136 : 26, 198 : 19, 363 : 4) ; " எத்துணை யாற்று ளிடுமணல் ............ அத்துணையும்பிற ரஞ்சொல்லி னார்மனம், புக்கனம்" (வளையாபதி) ; " தொல்லைநம் பிறவி யெண்ணிற் றொடுகடன் மணலுமாற்றா", " தருமண லலகை யாற்றா" (சீவக. 270, 3048) ; " பரவைவெண்மணலினும் பல புரவியின் பந்தி" (வி.பா.கிருட்டினன். 65) 237. மலர்தலையுலகம் : மதுரைக். 199. 235 - 7. திருவாய்மொழி 4. 1 : 4. 244. (பி - ம்.)‘சிதரற் பெயல் கான்றழிதலிற்' 247. "களிறுமாய் கழனி", " களிறுமாய் கதிர்ச்செநெற் கழனி" (சீவக. 54, 1617) ; " களிறு மாய்க்குஞ் செந்நெ லங்குலை " (நைடதம், சுயம்வர. 138) ; "யானை மறையக் கதிர்த்தலைச் சாலி நீடி " (பிரபு. மாயையுற். 11) ; " களிறு மாய்ப்ப கதழ்ந்தெழு பூம்பயிர்" (தணிகை. நாட்டு. 114) " களிறுமாய் செருந்தியொடு " (மதுரைக். 172)மாய்தல் - மறைதலென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; சிலப். 9 : 2, அடியார் ; சீவக. 453, ந.
|