323
சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரு
மழையொழுக் கறாஅப் பிழையா விளையுட்
பழையன் மோகூ ரவையகம் விளங்க;
நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன
510 தாமேஎந் தோன்றிய நாற்பெருங் குழுவுங்
கோடுபோழ் கடைநருந் திருமணி குயினருஞ்
சூடுறு நன்பொன் சுடரிழை புனைநரும்
பொன்னுரை காண்மருங் கலிங்கம் பகர்நருஞ்
செம்புநிறை கொண்மரும் வம்புநிறை முடிநரும்
515 பூவும் புகையு மாயு மாக்களு
மெவ்வகைச் செய்தியு முவமங் காட்டி
நுண்ணிதி னுணர்ந்த நுழைந்த நோக்கிற்
கண்ணுள் வினைஞரும் பிறருங் கூடித்
தெண்டிரை யவிரறல் கடுப்ப வொண்பல்
520குறியவு நெடியவு மடிதரூஉ விரித்துச்;
சிறியரும் பெரியருங் கம்மியர் குழீஇ
நால்வேறு தெருவினுங் காலுற நிற்றரக்
கொடும்பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்துந்
தண்கட னாட னொண்பூங் கோதை
525பெருநா ளிருக்கை விழுமியோர் குழீஇ
விழைவுகொள் கம்பலை கடுப்பப் பலவுடன்
சேறு நாற்றமும் பலவின் சுளையும்;
வேறுபடக் கவினிய தேமாங் கனியும்

504-6. "மலையவுங் கடலவு மாண்பயந் தரூஉம்...................... ஓடாவம் பலர்" (பெரும்பாண். 67-76)

508-9. "பெரும்பெயர்மாறன் றலைவ னாகக், கடந்தடு வாய்வாளிளம்பல் கோச, ரியனெறி மரபினின் வாய்மொழி கேட்ப" (மதுரைக். 772-4)

516, (பி-ம்.) ‘எண்வகைச் செய்தியும்'

518. கண்ணுள்வினைஞர் : சிலப். 5:30.

516-8. "எவ்வகை யுயிர்களு முவமங் காட்டி, வெண்சுதை விளக்கத்து வித்தக ரியற்றிய, கண்கவ ரோவியம்" (மணி. 3:129-31)

524. (பி-ம்.) ‘தெண்கடனாடன்';

525. பெருநாளிருக்கை : "திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை" (சிலப். 23 : 56)