| மிடனும் வலனு நினையினிர் நோக்கிக் குறியறிந் தவையவை குறுகாது கழிமின் கோடுபல முரஞ்சிய கோளி யாலத்துக் கூடியத் தன்ன குரல்புணர் புள்ளி | 270 | னாடுகா ணனந்தலை மென்மெல வகன்மின் மாநிழற் பட்ட மரம்பயி லிறும்பின் ஞாயிறு தெறாஅ மாக நனந்தலைத் தேஎ மருளு மமைய மாயினு மிறா அவன் சிலையர் மாதேர்பு கொட்குங் | 275 | குறவரு மருளுங் குன்றத்துப் படினே யகன்கட் பாறைத் துவன்றிக் கல்லென வியங்க லோம்பிநும் மியங்க டொடுமின் பாடி னருவிப் பயங்கெழு மீமிசைக் காடுகாத் துறையுங் கானவ ருளரே | 280 | நிலைத்துறை வழீஇய மதனழி மாக்கள் புனற்படு பூசலின் விரைந்துவல் லெய்தி யுண்டற் கினிய பழனுங் கண்டோர் மலைதற் கினிய பூவுங் காட்டி யூறு நிரம்பிய வாறவர் முந்துற | 285 | நும்மி னெஞ்சத் தவலம் வீட விம்மென் கடும்போ டினியி ராகுவி ரறிஞர் கூறிய மாதிரங் கைக்கொள்பு |
268.கோளியாலம் : " கோளி யாலத்துக் கொழுநிழல் " (புறநா. 58 : 2) முரஞ்சல் முதிர்வாகிய குறிப்புணர்த்தற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். உரி. சூ. 35, இளம். தெய்வச். ந. 270. நாடு காணனந்தலை : " நாடுகா ணெடுவரை " (பதிற் 85 : 7) 275. " புளிஞரு மருளும் போக்கருஞ் சுரம் " (தணிகையாறு. 167) ; " குறவரு மருளுங் குன்றமொன்று " (குசேலோ. குசேலர் மேல். 39) இவ்வடி, உம்மை உயர்வு சிறப்புப்பொருளில் வந்ததற்கு மேற்கோள் ; தொல். இடை. சூ. 7, இளம். சே. ந ; நன். சூ. 271, 424, மயிலை ; நன். வி. சூ. 425, இ - வி. சூ. 256. 278. " பாடின் னருவிப் பயங்கெழு மாமலை " (சீவக.2112) 286. இம்மென்கடும்பு : " இம்மென விமிரும் " (குறிஞ்சிப். 147)
|