595
460 ஞெண்டாடு செறுவிற் றராய்க்கண் வைத்த
விலங்க லன்ன போர்முதற் றொலைஇ
வளஞ்செய் வினைஞர் வல்சி நல்கத்
துளங்குதசும்பு வாக்கிய பசும்பொதித் தேற
லிளங்கதிர் ஞாயிற்றுக் களங்கடொறும் பெறுகுவிர்
465முள்ளரித் தியற்றிய வெள்ளரி வெண்சோறு
வண்டுபடக் கமழுந் தேம்பாய் கண்ணித்
திண்டேர் நன்னற்கு மயினி சான்மெனக்
கண்டோர் மருளக் கடும்புட னருந்தி
யெருதெறி களம ரோதையொடு நல்யாழ் 
470மருதம் பண்ணி யசையினிர் கழிமின்
வெண்ணெ லரிநர் தண்ணுமை வெரீஇச்
செங்க ணெருமை யினம்பிரி யொருத்தல்
கனைசெலன் முன்பொடு கதழ்ந்துவரல் போற்றி
வனைகலத் திகிரியிற் குமிழி சுழலுந்
475துனைசெலற் றலைவா யோவிறந்து வரிக்குங்
காணுநர் வயாஅங் கட்கின் சேயாற்றின்
யாண ரொருகரைக் கொண்டனிர் கழிமி

 461. நெற்போருக்கு மலை : (பொருந. 244 ; பெரும்பண். 240 - 41, குறிப்புரை.) " போரொடு நிகர்வன புணர்மலை"(கம்ப. நாடு . 46) ; " தெரிந்திடும் போர்கள் ..........மேருவாயவே " (கந்த. நாடு. 22) ; " நெடுங்களத் தம்பொற் குன்ற நிரையெனப் பெரும்போர் செய்தார்"(திருவிளை. நாடு. 27)" வரைகளொப்பன போர் " (சீகாளத்தி.நக்கீர. 14)

463. துளங்குதசும்பு : " தசும்புதுளங் கிருக்கைத், தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்டம் " (பதிற். 42 : 11 - 2)

464. இளங்கதிர் ஞாயிறு : மணி.பதிகம், 1)

467. மலைபடு. 319. 

468. பொருந. 97.

469 - 70. நல்யாழ் மருதம்பண்ணி : (மலைபடு. 534 ; மதுரைக். 658)

471. " வெண்ணெ லரிநர் தண்ணுமை வெரீஇ " (நற். 350 : 1 , புறநா. 348 : 1 ) ; " வெண்ணெ லரிநர் பின்றைத் ததும்புந், தண்ணுமை வெரீஇய தடந்தா ணாரை " , " வெண்ணெ லரிநர் மடிவாய்த் தண்ணுமை ............படுபு ளோப்பும் " (அகநா. 40 : 13 - 4,204 : 10 - 11)

475.(பி-ம்.) ' இறந்து பனிக்கும் '

476.கட்கின்சேயாறு : (மலைபடு. 555)