பக்கம் எண் :

182
டியாமவ ணின்றும் வருது நீயிரு
மிருநிலங் கடந்த திருமறு மார்பின்
30முந்நீர் வண்ணன் பிறங்கடை யந்நீர்த்
திரைதரு மரபி னுரவோ னும்பன்
மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கு
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளு
மிலங்குநீர்ப் பரப்பின் வளைமீக் கூறும்.
35வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பி
னல்லது கடிந்த வறம்புரி செங்கோற்
பல்வேற் றிரையற் படர்குவி ராயிற்
கேளவ னிலையே கெடுகநின் னவல
மத்தஞ் செல்வோ ரலறத் தாக்கிக்
40கைப்பொருள் வௌவுங் களவேர் வாழ்க்கைக்
கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புல
முருமு முரறா தரவுந் தப்பா
காட்டுமாவு முறுகண் செய்யா வேட்டாங்
கசைவழி யசைஇ நசைவுழித் தங்கிச்
45
சென்மோ விரவல சிறக்கநின் னுள்ளங்
கொழுஞ்சூட் டருந்திய திருந்துநிலை யாரத்து
முழவி னன்ன முழுமர வுருளி
யெழூஉப்புணர்ந் தன்ன பரூஉக்கை நோன்பார்
மாரிக் குன்ற மழைசுமந் தன்ன

28.மு. சிறுபாண். 143: மலைபடு. 53.

27-8. சிறுபாண். 142 - 3 ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.

29. திருமறு மார்பு: ''திருமறு மார்பநீ யருளல் வேண்டும்'' (பரி.1 : 36) ; ''திருமகளாதலால்,‘புனைமறு' என்றார்'' பரி. 4 : 59. பரிமேல்)

30.(பி-ம்.) ‘புறங்கடை'

33. பொருந. 54-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

36.(பி-ம்.) ‘அல்லவை'

38. ''கேட்சின் வாழி கெடுகநின் னவலம்'' (மதுரைக். 208)

40. ''களவேர் வாழ்க்கையர்'' (மணி. 23 : 126)

40-41. ''தனிநீர் கழியினுந் தகைக்குந ரில்லென'' (சிலப். 13: 134)