25 | னிணம்வாய்ப்பெய்த பேய்மகளி ரிணையொலியிமிழ் துணங்கைச்சீர்ப் பிணையூப மெழுந்தாட வஞ்சுவந்த போர்க்களத்தா னாண்டலை யணங்கடுப்பின் | 30 | வயவேந்த ரொண்குருதி சினத்தீயிற் பெயர்புபொங்கத் தெறலருங் கடுந்துப்பின் விறல்விளங்கிய விழுச்சூர்ப்பிற் றொடித்தோட்கை துடுப்பாக | 35 | வாடுற்ற வூன்சோறு நெறியறிந்த கடிவாலுவ னடியொதுங்கிப் பிற்பெயராப் படையோர்க்கு முருகயர வமர்கடக்கும் வியன்றானைத் | 40 | தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற் |
25. (பி-ம்.) ‘பேஎய்' 26. துணங்கை : பெரும்பாண். 235-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. 25-6. "நிணந்தின் வாய டுணங்கை தூங்க" (முருகு. 56) என்பதையும் அதன் குறிப்புரையையும் பார்க்க. 28. (பி-ம்.) ‘வந்ந்த' 34. "தோளுங் கொண்டு துடுப்பெனத் துழாவிக் கொள்ளீர்" (தக்க. 748) 34-5. "பிடித்தாடி யன்ன பிறழ்பற்பே யாரக், கொடித்தானை மன்னன் கொடுத்தான் - முடித்தலைத், தோளொடு வீழ்ந்த தொடிக்கை துடுப்பாக, மூளையஞ் சோற்றை முகந்து" (பு. வெ. 160) 34-6. தக்க. 748, உரை, மேற். 29-35. "முடித்தலை யடுப்பாகப், புனற்குருதி யுலைக்கொளீஇத், தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியி, னடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய" (புறநா. 26:8-11) 37. "பிறக்கடி யொதுங்காப் பூட்கை" (பதிற். 80:8) 38. (பி-ம்.) ‘படையோர் முருகயர' 29-38. "முடித்தலை யடுப்பிற் பிடர்த்தலைத் தாழித், தொடித் தோட்டுடுப்பிற் றுழைஇய வூன்சோறு, மறப்பேய் வாலுவன் வயினறிந் தூட்ட" (சிலப். 26:242-4)
|