| றொன்முது கடவுட் பின்னர் மேய வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந விழுச்சூழிய விளங்கோடைய கடுஞ்சினத்த கமழ்கடாஅத் | 45 | தளறுபட்ட நறுஞ்சென்னிய வரைமருளு முயர்தோன்றல வினைநவின்ற பேர்யானை சினஞ்சிறந்து களனுழக்கவு மாவெடுத்த மலிகுரூஉத்துக | 50 | ளகல்வானத்து வெயில்கரப்பவும் வாம்பரிய கடுந்திண்டேர் காற்றென்னக் கடிதுகொட்பவும் வாண்மிகு மறமைந்தர் தோண்முறையான் வீறுமுற்றவு | 55 | மிருபெரு வேந்தரொடு வேளிர் சாயப் |
40-42. "மறைமுது முதல்வன் பின்னர் மேய, பொறையுயர் பொதியிற் பொருப்பன்" (சிலப். 12 : இறுதிப்பகுதி) 44. யானைமதம் கமழ்தல் : "குதிபாய் கடாம், மதகோடி யுல கேழு மணநாற" (தக்க. 3) என்பதன் விசேடக்குறிப்பைப் பார்க்க ; "மாவ தத்தினை யிழைத்திடும் பூட்கையின் மதநீர், காவ தத்தினுங் கமழ்தரு கலிங்கநாடு" (கந்த. மார்க்கண்டேயப். 114) 45. (பி-ம்.) ‘அயறுபட்டநறுஞ்'; புறநா. 22:7 46. பெரும்பாண். 352 ; புறநா. 38:1, 42:1. 47. "தொழினவில்யானை" (பதிற். 84:4) 44-7. கடுஞ்சினத்த யானை: "கடுஞ்சினத்த களிறு" (மதுரைக். 179); "கடுஞ்சினத்த களிற்றெருத்தின்" (யா. வி. சூ. 56, மேற். "தாழிரும்") 48. (பி-ம்.) ‘உழக்க' 44-8. "செல்சமந் தொலைத்த வினைநவில் யானை, கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி, வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந்தியல" (பதிற். 82:4-6) 50. (பி-ம்.) ‘வெயிற்கரப்ப' 51. (பி-ம்.) ‘வாப்பரிய' 52. (பி-ம்.) ‘காற்றெனக்' 51-2. "காலெனக் கடுக்குங் கவின்பெறு தேரும்" (மதுரைக். 388)
|