15 | பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி யிருங்களி பரந்த வீர வெண்மணற் செவ்வரி நாரையோ டெவ்வாயுங் கவரக் கயலற லெதிரக் கடும்புனற் சாஅய்ப் பெயலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழை | 20 | யகலிரு விசும்பிற் றுவலை கற்ப வங்க ணகல்வய லார்பெயர் கலித்த வண்டோட்டு நெல்லின் வருகதிர் வணங்க முழுமுதற் கமுகின் மணியுற ழெருத்திற் கொழுமட லவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை | 25 | நுண்ணீர் தெவிள வீங்கிப்புடைதிரண்டு தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற நளிகொள் சிமைய விரவுமலர் வியன்காக் குளிர்கொள் சினைய குரூஉத்துளி தூங்க மாட மோங்கிய மல்லன் மூதூ | 30 | ராறுகிடந் தன்ன வகனெடுந் தெருவிற் பாடலைக் கண்ணிப் பரேரெறுழ்ந் திணிதோண் |
பீரென்னுஞ் சொல் அம்முச்சாரியை பெற்றுவருதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். புள்ளிமயங். சூ70, ந. 18. சாயென்பது நுணுக்கமாகிய குறிப்பை உணர்த்துமென்பதற்கு இவ்வடி மேற்கோள் (தொல். உரி. சூ. 34, சே. ந ; இ - வி. சூ. 281) ; இவ்வடி பெயரின்பின் உரிச்சொல் நின்றதற்குமுதாரணம் ; (இ - வி. சூ. 280 ; அகநா. 303 : 19 - 20. 19. (பி - ம்.)‘ பெயலுழந்து ' பொங்கல் வெண்மழை : "பொங்க லிளமழை" (ஐங். 276 : 3) ; " பெய்து புறந்தந்து பொங்க லாடி, விண்டுச் சேர்ந்த வெண்மழை" (பதிற். 55 : 14 - 5) ; " பெய்து புலந்துறந்த பொங்கல் வெண்மழை" (அகநா. 217 : 1) வெண்மழை : முல்லை. 100. 20. அகலிரு விசும்பு :பெரும்பாண் 1. " மாரி கற்பான் றுவலைநாட் செய்வ தேபோல்" (சீவக. 2070) 21 - 2. அகநா. 13:17 - 21. 26. " தகைசெய் தீஞ்சேற் றின்னீர்ப் பசுங்காய்" (மதுரைக். 400) 30. மதுரைக். 359-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. 31. படலைக்கண்ணி : பெரும்பாண். 60-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. பரேரெறுழ் : பட்டினப். 294.
|