| றெய்யா மையலை நீயும் வருந்துதி நற்கவின் றொலையுவு நறுந்தோ ணெகிழவும் | 10 | புட்பிற ரறியவும் புலம்புவந் தலைப்பவு முட்கரந் துறையு முய்யா வரும்படர் செப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின் முத்தினு மணியினும் பொன்னினு மத்துணை நேர்வருங் குரைய கலங்கெடிற் புணருஞ் | 15 | சால்பும் வியப்பு மியல்புங் குன்றின் மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்த லாசறு காட்சி யையர்க்கு மந்நிலை யெளிய வென்னார் தொன்மருங் கறிஞர் மாதரு மடனு மோராங்குத் தணப்ப | 20 | நெடுந்தே ரெந்தை யருங்கடி நீவி யிருவே மாய்ந்த மன்ற லிதுவென நாமறி வுறாலிற் பழியு முண்டோ வாற்றின் வாரா ராயினு மாற்ற வேனையுல கத்து மியைவதா னமக்கென | 25 | மானமர் நோக்கங் கலங்கிக் கையற் றானச் சிறுமைய ளிவளுந் தேம்பு மிகன்மீக் கடவு மிருபெரு வேந்தர் வினையிடை நின்ற சான்றோர் போல விருபே ரச்சமோ டியானு மாற்றலேன் | 30 | கொடுப்பினன் குடைமையுங் குடிநிர லுடைமையும் |
8. எய்யாமை யென்னுமுரிச்சொல் அறியாமை யென்னுங் குறிப் புணர்த்துமென்பதற்கு இவ்வடிமேற்கோள் ; தொல். உரி. சூ. 44, இளம். சே. தெய்வச். ந ; இ. வி. சூ. 290. 9. "தொல்கவின் றொலையத் தோணலஞ் சாஅய்" (நற். 14:1) ; "தொல்கவின் றொலைந்து தோணலஞ் சாஅய்" (குறுந். 381:1) ; "மென்றோ ணெகிழவும் ............ பொன்போல் விறற்கவின் றொலைத்த" (ஐங். 230:3-4) ; "நெகிழ்ந்த தோளே ...... மேனி தொன்னலந் தொலைய" (அகநா. 270:4-10) 13-4. "பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகும்" (மூதுரை, 18) 23. (பி-ம்.) ‘வாராதாயினும்'
|