| புண்ணுமிழ் குருதி முகம்பாய்ந் திழிதரப் புள்ளி வரிநுதல் சிதைய நில்லா தயர்ந்துபுறங் கொடுத்த பின்னர் நெடுவே | 175 | ளணங்குறு மகளி ராடுகளங் கடுப்பத் திணிநிலைக் கடம்பின் றிரளரை வளைஇய துணையறை மாலையிற் கைபிணி விடேஎ நுரையுடைக் கலுழி பாய்தலி னுரவுத்திரை யடுங்கரை வாழையி னடுங்கப் பெருந்ததை | 180 | யஞ்சி லோதி யசையல் யாவது மஞ்ச லோம்புநின் னணிநல நுகர்கென மாசறு சுடர்நுத னீவி நீடுநினைந் தென்முக நோக்கி நக்கன னந்நிலை
|
172. புண்ணுமிழ்குருதி : பதிற். 118. பாய்தல், பரத்தலென்னும் குறிப்புப்பொருண்மையையுணர்த்து மென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். உரி. சூ. 63, ந ; இ-வி. சூ. 281, உரை ; ‘புண்ணுமிழ் குருதிப் புனல் பாய்ந்து' என்ற பாடத்துடன், மேற்கோள் காட்டுவர் ; தொல். உரி. சூ. 64, இளம். 175. முருகு. 245, குறிப்புரை. 176. (பி-ம்.) ‘திண்ணிலை' 177. (பி-ம்.) ‘துணையமை மாலையிற்' 176-7. சிறுபாண். 69, குறிப்புரை. "கடம்பு சூடிய கன்னி மாலை போற், றொடர்ந்து கைவிடாத் தோழி மாரொடும்" (சீவக. 990) 178-9. "வாழை முழுமுத றுமிய..........இழிதரு மருவி" (முருகு. 307-16) 178-81. "காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள், தாமரைக்கண் புதைத்தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலால், நணாகநறுந்தண்டார் தயங்கப்பாய்ந் தருளினாற், பூணாக முறத்தழீஇப் போதந்தான்" (கலித்.39:1-4) 182. நுதல் நீவுதல் : நற். 28:2, 316:6 ; கலித். 21:6 ; அகநா. 240:10 ; பெறுக நின்னை யானென, நறுநுத னீவிப் படர்தந் தோனே" (தமிழ்நெறி. மேற்.) 160-83. இவ்வடிகள், தலைவன் களிறுகாத்தவாற்றிற்கும் புனலின் எடுத்தலாற்றிற்கும் மேற்கோள் ; தொல். பொருளியல், சூ. 13, ந.
|