| ஆசிரியப்பா பாற்கடல் போலப் பரந்த நன்னெறி நூற்படு வான்பொரு ணுண்ணிதி னுணர்ந்த போக்கறு கேள்விப் புலவோர் புலத்தின் நாற்பொருள் பொதிந்த தூக்கமை யாப்பினைத் |
5 | தேக்கிய சிந்தைய னாகிப் பாற்பட எழுத்துஞ் சொல்லும் பொருளுமிம் மூன்றும் இழுக்கற வாய்ந்த வழுக்கிறொல் சீர்த்தித் தொல்காப் பியமெனுந் தொடுகடற் பரப்பை மறுவுங் குறைவு மின்றி யென்றும். |
10 | கலையி னிறைந்த கதிர்மதி யென்ன நிலையுடை கலத்தி னெடுங்கரை காணாக் கல்லா மாந்தர் கற்பது வேண்டியும் நல்லறி வுடையோர் நயப்பது வேண்டியும் உடையிடை யிட்ட காண்டிகை யுரைத்தும் |
15 | ஆன்றோர் புகழ்ந்த வறிவினிற் றெரிந்து |
1. இந்தச்சிறப்புப்பாயிரச்செய்யுட்கள் நான்கும் பண்டைக்காலத்தனவே.
2.இந்த வெண்பா, திருவாவடுதுறை யாதீன மடத்துப் புத்தக சாலையிலுள்ள ஒரு பழைய திருக்குறட் பரிமேலழகருரைப் புத்தகத்திறுதியில், "நற்றிணை நல்ல", "முருகுபொருநாறு", "நாலடிநான்மணி" என்னும் வெண்பாக்கள் மூன்றனோடும் எழுதப்பட்டிருந்தது.