இரண்டாவது 1பொருநராற்றுப்படை
| அறாஅ யாண ரகன்றலைப் பேரூர்ச் சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது வேறுபுல முன்னிய விரகறி பொருந குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல் | 5 | விளக்கழ லுருவின் விசியுறு பச்சை யெய்யா விளஞ்சூற் செய்யோ ளவ்வயிற் றைதுமயி ரொழுகிய தோற்றம் போலப் பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை யளைவா ழலவன் கண்கண் டன்ன | 10 | துளைவாய் தூர்ந்த துரப்பமை யாணி யெண்ணாட் டிங்கள் வடிவிற் றாகி யண்ணா வில்லா வமைவரு வறுவாய்ப் |
1 பொருநராற்றுப்படைக்கு இந்நூலை மேற்கோளாகக் காட்டினர்; தொல். புறத், சூ. 36, ந. 2. "சாறு - விழா; ‘சாறு....... உறாது' இது பொருநராற்றுப்படை'' (தக்க. 394, உரை) 1 - 2. "கல்லெனக் கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தபிற், புல்லென்ற களம்போலப் புலம்புகொண்டு - கல்லென்னும் ஓசையுண்டாக அழகு பெற்ற திருநாளை வழிப்படுத்திவிட்ட பிற்றைநாள் பொலிவழிந்த இடம் போலத் தனிமை கொண்டு'' (கலித். 5 : 10 - 11, ந.) 3. வேறு புலம் - வேறிடம், 5. "விளக்கழ லுறுத்த போலும் விசியுறு போர்வை'' (சீவக. 559, ந.) என்பதற்கு இவ்வடி மேற்கோள். ‘வள் - தோல் ; விளக்கழல் ..... பச்சை' (கல். "வள்ளுறை" மயிலேறும். மேற்.) 7. (பி-ம்) ‘ஒழுங்கிய' 8. "பழையதோர் பொல்லம் பொத்திய" (திருவிளை. விறகு. 13) 11. "பிறைபிறந் தன்ன பின்னேந்து கவைக்கடை" (பெரும்பாண். 11) 10 - 11. "கொளத்தகு திவவுத் திங்கட் கோணிரைத் தனையவாணி" (சீவக. 559) 12. "சுனைவறந் தன்ன விருடூங்கு வறுவாய்" (பெரும்பாண். 10)
|