505

ஓடு ஆலாக்குக.

208-10. பிறங்கு மலை மீமிசை கடவுள் வாழ்த்தி கைதொழுது ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி - பெரியமலையில் மிக உயர்ந்த இடத்தேயுறைகின்ற முருகனையும் வாழ்த்தி வணங்கி அவன்முன்னே இவள் மயக்கமுறுதற்குக் காரணமான வஞ்சினத்தை உண்மையால் தெளிவித்து,

வஞ்சினம் - பிரியின் அறனல்லது செய்தேனாவேனென்னுமொழி. முன்தேற்றாதலின், ஏமுறுவஞ்சினமென்றார்.

211. அம் தீ தெள் நீர் குடித்தலின் நெஞ்சு அமர்ந்து - அம்மலையில் அழகிய இனிய தெள்ளிய அருவிநீரை அவன்குடிக்கையினாலே இவள் நெஞ்சு சூளுறவிலேபொருந்தி,

நீர் குடித்தலும் ஒருசூளுறவென்று கொள்க.

நெஞ்சமைந்தென்றும் பாடம்.

212-4. [அருவிட ரமைந்த களிறுதரு புணர்ச்சி, வானுரி யுறையுள் வயங்கியோ ரவாவும், பூமலி சோலை யப்பகல் கழிப்பி :] வான் உரிய உறையுள் வயங்கியோர் அவாவும் அரு விடர் அமைந்த பூ மலி சோலை களிறு தரு புணர்ச்சி அ பகல் கழிப்பி ஆகாயத்திடத்தே தமக்குரிய இருப்பினையுடைய விளங்கிய தேவர்விரும்பும் அரிய முழைஞ்சு களினிடத்தே பொருந்தின பூமிக்க சோலையிலே களிறுகூட்டின கூட்டத்தை அன்றைப் பகற்பொழுதெல்லாம் போக்கி,

உரிய உறையுள் : விகாரம்.

உண்மைசெப்புங்கிளவி கூறினாள்.

215-6. [எல்லை செல்ல வேழூர் பிறைஞ்சிப், பல்கதிர் மண்டிலங் கல்சேர்பு மறைய :] பல் கதிர் மண்டிலம் ஏழ் ஊர்பு எல்லை செல்ல இறைஞ்சி கல் சேர்பு மறைய - பலகிரணங்களையுடைய ஞாயிறு ஏழு குதிரைபூண்ட தேரையேறிப் பகற்பொழுது போம்படி தாழ்ந்து அத்த கிரியைச்சேர்ந்து மறைகையினாலே,

217. மான் கணம் மரம் முதல் முதல் தெவிட்ட - மான்திரள் மரத்தடிகளிலே திரள,

தெவிட்டல் - அசையிடுதலுமாம்.

217-8. ஆன் கணம் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர - பசுவினுடைய திரள் கன்றுகளையழைக்குங் குரலையுடையவாய் மன்றுகள் நிறையப் புகுதலைச்செய்ய,

219-20. ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில் ஓங்கு இரு பெண்ணை அகம் மடல் அகவ - ஊதுகின்ற கொம்புபோன்ற ஓசையை