பத்துப்பாட்டு "முன்னிலை சுட்டிய வொருமைக் கிளவி ................வேண்டும்" (தொல். எச்ச. சூ. 66) என்பதனான், இங்ஙனமுடிந்தது. ";கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியு, மாற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப், பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச், சென்று பய னெதிரச் சொன்ன பக்கமும்" (தொல். புறத். சூ. 108) என்பது இதற்கு விதி. ";ஆசிரிய நடைத்தே வஞ்சி"; (தொல். செய். சூ. 368) என்பதனாற் பின்னர் வஞ்சி மிகவும் வந்தனவென்றுணர்க.; சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக்கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படைக்கு மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த உரை முற்றிற்று.
வெண்பா 1 | 1ஏரியு மேற்றத்தி னானும் பிறர்நாட்டு வாரி சுரக்கும் வளனெல்லாந் - தேரின்; அரிகாலின் கீழுகூஉ மந்நெல்லே சாலுங் கரிகாலன் காவிரிசூழ் நாடு. | | | 2 | அரிமா சுமந்த வமளிமே லானைத் 2திருமா வளவனெனத் தேறேன் - திருமார்பின் மானமா லென்றே தொழுதேன் றொழுதகைப் போனவா பெய்த வளை.; | | | 3 | 3முச்சக் கரமு மளப்பதற்கு நீட்டியகால் இச்சக் கரமே யளந்ததாற் - செய்ச்செய் அரிகான்மேற் றேன்றொடுக்கு மாய்புனனீர் நாடன் 4கரிகாலன் கானெருப் புற்று.; |
1 தொல். புறத்திணை. சூ. 31, ந. மேற். 2 "திருமாவளவன்" (பட்டினப். 229); "செருவெ காதலிற் றிரு மா வளவன்" (சிலப். 5 : 90) 3 இச்செய்யுள் பட்டினப்பாலையின் இறுதியிலும் காணப்படுகிறது.; 4 கரிகாலன் கானெருப்புற்று : புதுக்கோட்டைக்குடுமியாமலைச் சாஸனம்.
|